செய்திகள்

வவுனியாவின் பல இடங்களை பொலிஸார் சுற்றிவளைத்து பலர் மீது வழக்குப் பதிவு

  • Dec 8, 2024 - 07:36 PM
  • 0 Comments

வவுனியா நகரம் மற்றும் நகரை அண்மித்த சில பகுதிகளில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்ததுடன், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை அசுத்தமாக வைத்திருப்போருக்கு எதிராக வழக்குத் தாக்கலும் செய்யப்பட்டது. பருவ மழை மற்றும் சீரற்ற காலநிலையால் பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், கல்வி நிலையங்கள் என்பவற்றில் வவுனியா பொலிஸார் இன்று (08) திடீர் […]

செய்திகள்

அநுர அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இல்லை – காணாமலாக்கப்பட்ட உறவினர்கள்

  • Dec 8, 2024 - 07:19 PM
  • 0 Comments

இறுதி யுத்தத்தின் போது ஆனந்தபுரம், வட்டுவாகல், தேவிபுரம், ஓமந்தை ஆகிய நான்கு இடங்களில் எமது உறவுகள் சரணடைந்தபோது கடமையில் இருந்த படை அதிகாரிகளை ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் முதற்கட்டமாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென காணாமலாக்கப்பட்ட உறவினர்கள் சுவிட்சர்லாந்தின் இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லினிடத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சுவிஸ்சர்லாந்தின் வெளிவிவகாரங்களுக்கான பெடரல் திணைக்களத்தின் சமாதானம், மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கான இராஜாங்க துணைச் செயலாளர் டிம் எண்டர்லின் இரண்டு நாட்கள் வடக்கிற்கான […]

செய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடக்கும் ஆனால் நடக்காது

  • Dec 7, 2024 - 07:29 PM
  • 0 Comments

உயர்தரப் பரீட்சைக்குப் பின்னர், உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டிருந்த போதிலும், அது பிற்போடப்பட்டதாக அதன் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க குறிப்பிட்டார். 2023ஆம் ஆண்டு நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்துச் செய்து புதிய வேட்புமனுக்களை கோருவதற்கான வரைவுச் சட்டமூலத்தை தயாரிப்பதற்கு அண்மையில் அமைச்சரவையின் அங்கீகாரமும் பெறப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தலை விரைவில் நடத்துமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. […]

செய்திகள்

நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது

  • Dec 7, 2024 - 06:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் 300 பவுண் நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக தேடப்பட்ட பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். இன்போது பெருமளவு நகைகள், ஆவணங்கள், திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கைக்குண்டு என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் பகுதி பொலிஸ் பிரிவுகளில் கடந்த 2 வருடங்களாக துவிச்சக்கரவண்டியில் முகத்தை மறைத்து சென்று நூதனமாக நகைகளை திருடும் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது. குறித்த சம்பவங்கள் […]

உள்ளூர்

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 3 ஆயிரம் வாக்குகளால் தப்பி பிழைத்த ரெலோவின் கலந்துரையாடல்!

  • Dec 7, 2024 - 02:00 PM
  • 0 Comments

வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரத்தினமும் கலந்துக்கொள்வதாக தெரியவருகின்றது அத்துடன் ரணில் ஆதரவு அணி வினோநோகராதலிங்கமும் கலந்துக்கொண்டுள்ளாராம் டெலோவின் கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத ;தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில்இடம்பெற்றுவருகின்றது. ரெலோ தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் அடுத்த கட்டநகர்வு மற்றும், சமகாலஅரசியல் நிலவரங்கள், தொடர்பாக பேசப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது கலந்துரையாடலில் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், கோவிந்தன் கருணாகரன், மற்றும் விந்தன்கனகரத்தினம்,பிரசன்னா இந்திரகுமார்,செ.மயூரன் , பேச்சாளர் சுரேன் […]

உள்ளூர் செய்திகள்

மாவீரர்களை மாவீரர்கள் என பாராளுமன்றத்தில் சொல்லப்பயந்த எம்.பி.

  • Dec 7, 2024 - 12:57 PM
  • 0 Comments

இருந்தால் தலைவன் இறந்தால் இறைவன் என மேதகுவிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா எங்கே? மாவீரர்களை இறந்தவர்கள் என விழித்த பாராளுமன்ற உறுப்பினர் சத்தியலிங்கம் எங்கே? ஆனால் இருவரும் வைத்தியர்களே.   இதையும் படியுங்கள்>நீண்ட காலமாக யாழ் பொலிஸாருக்கு ஆட்டம் காட்டியவர் கைது https://www.youtube.com/watch?v=I9vE6Q6IR08

உள்ளூர் செய்திகள்

இன்றைய செய்திகளின் தொகுப்பு…!(காணொளி)

  • Dec 6, 2024 - 10:21 PM
  • 0 Comments

    ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல் கிளிநொச்சியில் தாய் தூக்கில் மரணம் 14 வயதுடைய மகன் நிறைவெறியில் கைது மண்டையிலிருந்த கொண்டையை மறந்த சபாநாயகர் அசோகரன்வல வவனியாவில் கொரிய நிறுவனத்தின் திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டம் கோபா குழுவின் தலைவர் பதவி எதிர்க்கட்சிக்கு https://fb.watch/wiUTYwy9YW/

செய்திகள்

ஊடக்துறை கட்டுப்படுத்தும் திட்டம் எதுவுமில்லை -ஜனாதிபதி

  • Dec 6, 2024 - 04:10 PM
  • 0 Comments

அனைத்து பிரஜைகளுக்கும் சிறந்த வாழ்க்கைத்தரத்தை ஏற்படுத்தும் பணியில் ஊடகங்களை வெளிநபர்களாக அன்றி அரசின் பங்குதாரர்களாக கருதுவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துளார். இலத்திரனியல் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளை இன்று ஜனாதிபதி அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். சிறந்த அரசியல் கலாசாரத்தை மக்கள் எதிர்பார்ப்பதாகவும், அதற்காகவே தற்போதைய அரசாங்கத்தை மக்கள் தெரிவு செய்துள்ளதாகவும், மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல், சமூக மற்றும் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு இணையுமாறு அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி அழைப்பு […]

செய்திகள்

10 அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசுகிறேன்;- ஐநாவின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி

  • Dec 5, 2024 - 07:07 PM
  • 0 Comments

நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் 10 பேரின் விடுதலை குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் பேசுவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ் வாக்குறுதியளித்துள்ளார். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரென்ஞ்சுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05) கொழும்பில் நடைபெற்றது. இந்த அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் […]

செய்திகள்

நாட்டில் நம்பிக்கையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது – ஜனாதிபதி

  • Dec 5, 2024 - 06:25 PM
  • 0 Comments

புதிய முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகையில் அரசியல் பக்கச்சார்பு அடிப்படையில் சந்தர்ப்பம் வழங்கப்படாது என ஜனாதிபதி தெரிவித்துளளார் நாட்டுக்கு உகந்த முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முழுச் சுதந்திரத்தையும் இலங்கை முதலீட்டுச் சபைக்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இலங்கைய முதலீட்டுச் சபையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். அரசியல் ஸ்திரத்தன்மையை போலவே நாட்டுக்குள் நிதி ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அது […]

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp