உள்ளூர் செய்திகள்

இலங்கை மாகாணசபை முறைமையை முற்றாக நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐநாவில் தெரிவிப்பு

  • Sep 11, 2025 - 08:30 AM
  • 0 Comments

இந்தியா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வின் தொடக்க நாளான திங்கட்கிழமை (08-09) தனது நீண்டகால கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலங்கையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கோரியுள்ளது. இந்த 13ஆம் திருத்தம், இந்தியா-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில், 1987 ஆம் ஆண்டு நியூடெல்லியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டது. இலங்கை, இதுவரை 13ஆம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டது. ஜெனீவாவில் இந்தியா நிரந்தர வதிவிட பிரதிநிதி அனுபமா சிங் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இல்ரேலுக்கு சென்ற இலங்கை ஊடகவியலாளர்களை அரசு அனுப்பவில்லையென கௌசல்யா அரியரத்ன எம்பி தெரிவித்துள்ளார்

  • Sep 11, 2025 - 08:15 AM
  • 0 Comments

எந்தவொரு பொதுப்பணியாளரும் தனிப்பட்ட காரணத்துக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள முடியும், எனவும் ஆனால் அதற்காக முறையான விடுமுறையை பெற்றிருக்க வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கௌசல்யா அரியரத்னே, செவ்வாய்க்கிழமை (09-09) பாராளுமன்றத்தில், தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பிகர் உறுப்பினர் முஜிபுர் ர{ஹமான் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 16 இலங்கை ஊடகவியலாளர்கள் இஸ்ரேலில் பயணம் செய்திருந்ததைப் பற்றிப் ; முஜிபுர் ர{ஹமான் கேள்வியெழுப்பினாhர் ர{ஹமான் கூறியதாவது, இரு ஊடகவியலாளர்கள்; […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஐஸ் போதை பொருளால் ஜேவிபியும் பொதுஜன பெரமுனவும் அரசியல் இலாபமீட்டுகின்றார்கள்- பிரதான எதிர்கட்சி

  • Sep 10, 2025 - 09:00 AM
  • 0 Comments

ஆபத்தான இரசாயனப் பொருட்கள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அரசாங்கம் எத்தகைய திட்டங்களையும் திறனை கொண்டுள்ளது என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது இதுகுறித்து நடைபெற்று வரும் விசாரணைகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளது. எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுரங்க ரத்நாயக்கா நேற்று (09-09) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். அவர் குறிப்பிட்டதாவது, இலங்கைக்கு கடத்தப்பட்டதாகக் கருதப்படும், ‘ஐஸ்’ என அழைக்கப்படும் கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பொருட்கள் பல […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

எல்லா – வெல்லவாயை விபத்திற்கு சாரதியே காரணம்- பிரதி பொலிமா அதிபர்

  • Sep 10, 2025 - 08:05 AM
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை பிரதான வீதியில் கடந்த வாரம் நிகழ்ந்த பேருந்து விபத்து, ஓட்டுநரின் அலட்சியத்தினால் ஏற்பட்டதாக போக்குவரத்து துறை பிரதி பொலிஸ் மா அதிபர் இந்திக ஹபுகொடா தெரிவித்துள்ளார். செப்டம்பர் 4ஆம் திகதி 24வது மைல் கல் அருகே இந்த விபத்து இடம்பெற்றது. தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சுற்றுலா பயணத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, பேருந்து சாலையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்தது. இதில் 15 பேர் உயிரிழந்ததுடன், 17 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அரசாங்கம் ஊடகப் பணியாளர்களை குறிவைப்பதாக சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு

  • Sep 7, 2025 - 01:00 PM
  • 0 Comments

அரசாங்கத்தின் விமர்சனங்களை வெளியிடும் சில ஊடகப் பணியாளர்கள்இ குறிப்பாக யூடியூப் பயனர்கள்இ தற்போது அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதாக பிரதான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இன்று தெரிவித்தார் சஜித் பிரேமதாசா வெளியிட்ட செய்தியலில்இ ‘அரசாங்கம் தங்களுக்குப் பிடிக்காத தகவல்களை வெளியிடும் ஊடகங்களை அச்சுருத்தக்கூடாது. அதற்குப் பதிலாகஇ தங்களின் தவறுகளை திருத்த முயற்சி செய்ய வேண்டும்’ என்று அவர் கூறினார். இவர் குறிப்பிட்ட சம்பவங்கள் யூடியூப் பயனர்கள் எராஜ் வீரரத்தினே மற்றும் மிலிந்த ராஜபக்சாவின் இல்லங்களில் நடந்ததாகும். இனம் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கைக்கு மருந்துகளை கொள்வனவு செய்ய அரசு பொறிமுறையொன்றை நிறுவ முடியாதுள்ளது

  • Sep 7, 2025 - 08:41 AM
  • 0 Comments

இலங்கையின் மருந்து இறக்குமதியை பல்முகப்படுத்தும் என அரசு பரவலாக அறிவித்திருந்த திட்டம், அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்து பல மாதங்கள் கடந்தும், விவாதத்தைத் தாண்டாமல் நின்று போயுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, துருக்கி, வங்காளதேசம் போன்ற நாடுகளிலிருந்து மருந்துகள் பெறுவதற்கான முன்மொழிவு இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. சுகாதார அமைச்சு, நீடித்து வரும் மருந்துக் குறைபாடுகளின் நடுவில்; உயிர் காக்கும் மருந்துகளைப் பாதுகாப்பதே இத்திட்டத்தின் நோக்கம் என வலியுறுத்துகின்றது. எனினும், உள்ளகத் தகவல்களின் படி, இலங்கையின் மொத்த […]

உள்ளூர் செய்திகள்

பதுளை எல்லா – வெல்லவாயை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 10 இலட்சம் இழப்பீடு

  • Sep 6, 2025 - 09:11 AM
  • 0 Comments

எல்லா – வெல்லவாயை சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபா 10 இலட்சம் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதியின் நிதியத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்காலை நகரசபை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்து, எஸ்யூவி வாகனத்துடன் மோதியதையடுத்து 1,000 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்திருந்தனர். இதில் குழந்தைகள் உட்பட 18 பேர் படுகாயமடைந்த நிலையில் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

  • Sep 6, 2025 - 08:53 AM
  • 0 Comments

கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் கல்வாரி தேவாலயத்திற்கு அருகிலுள்ள வெற்றுக் காணியொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த சிவசாமி தனபாலசுந்தரம் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உள்ளூர் செய்திகள்

இன்று அதிகாலை கொழும்பில் துப்பாக்கிசூடு ஒருவர் பலி ஒருவர் காயம்

  • Sep 6, 2025 - 08:11 AM
  • 0 Comments

கொழும்பில் நேற்றிரவு (05-09) மற்றும் இன்று அதிகாலை (06-09) என இரு தனித்தனியான துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முதல் சம்பவம் நேற்று இரவு 11.45 மணியளவில் கிராண்ட்பாஸ் மஹாவத்த மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் நடைபெற்றது. மோட்டார் சைக்கிளில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள் ரிவோல்வர் துப்பாக்கியால் ஒருவரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். இரண்டாவது சம்பவம் இன்று அதிகாலை 1.40 மணியளவில் மருதானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தங்காலை நகரசபை செயலாளர் உட்பட 15 பேர் பலி 16 பேர் படுகாயம்.

  • Sep 6, 2025 - 06:38 AM
  • 0 Comments

எல்ல–வெளவாயைச் சாலைப் பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் குறைந்தது 15 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தங்காலை நகரசபை ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து சென்ற பேருந்து 1,000 அடி பள்ளத்தில் விழுந்ததில் இந்த துயரச்சம்பவம் இடம்பெற்றது. விபத்து நேற்று (05-09) நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் எட்டு பெண்கள், இரண்டு சிறுவர்கள், பேருந்து ஓட்டுனர் மற்றும் தங்காலை நகரசபை செயலாளர் டபிள்யூ.கே. ரூபசேன உள்ளிட்டோர் அடங்குகின்றனர். மேலும் 16 பேர் காயமடைந்த நிலையில் பதுளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp