சீனாவும் பாகிஸ்தானும் கொண்டுவந்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் நிராகரித்தது
ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால […]









