செய்திகள்

யுத்தத்தால் உயிரிழந்த மக்களுக்கு நினைவுத்தூபி அமைக்கத் தயார் – அங்கஜன் இராமநாதன்.

  • Nov 4, 2024 - 12:38 PM
  • 0 Comments

கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது சொந்த செலவில் நினைவுத்தூபி அமைக்கத் தயார் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தொடர்ந்து கருத்து வெளியிடுகையில் நீண்ட கால உள்நாட்டு யுத்தத்தால் நாட்டு மக்கள் பலரை இழந்துவிட்டோம். இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வின்மை மற்றும் சம உரிமையின்மை ஆகிய காரணிகளால் யுத்தம் தோற்றம் பெற்று பலரையும் காவு கொண்டது இந்த யுத்தத்தால் தமிழ் மக்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் யுத்தம் மௌனித்து 15 […]

செய்திகள்

திருகோணமலை மீனவர்களுக்கு இந்தியா வாழ்வாதார உதவிகளை வழங்கியது.

  • Nov 4, 2024 - 10:57 AM
  • 0 Comments

  இலங்கை மற்றும் இந்தியாவின் நட்புறவை மேம்படுத்த இந்திய தூதரகத்தினால் திருகோணமலையிலுள்ள 21 ஆழ்கடல் மீன்பிடி மீனவ சங்கங்களுக்கு மீன்பிடி உபகரணங்கள் இந்தியா வழங்கி வைத்துள்ளது. திருமலை கடற்றொழிலாளர்கள் தொழிற்சங்க தலைவர் ரவிக்குமார் தலைமையில் நேற்று (03) திருக்கடலூர் மீனவர்கள் வர்த்தக சங்க கட்டடத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக இந்திய உயரிஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து கொண்டார்.  

செய்திகள்

இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை.

  • Oct 27, 2024 - 04:54 PM
  • 0 Comments

இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது. அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் […]

செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

  • Oct 26, 2024 - 04:06 PM
  • 0 Comments

பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் இறுதியுமான டெஸ்ட் ராவல்பிண்டியில் கடந்த 24-ந்தேதி தொடங்கி நடைப்பெற்று வந்தது நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டதால் இங்கிலாந்து அணியால் ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. இதனால் முதல் இன்னிங்சில் 267 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது ஜேமி ஸ்மித் 89 ஓட்டங்களும் டக்கெட் 52 ஓட்டங்களும் சேர்த்தனர். பாகிஸ்தான் அணி சார்பில் சஜித் கான் 6 விக்கெட்டும், நோமன் […]

செய்திகள்

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை விநியோக ஆரம்பம்.

  • Oct 26, 2024 - 12:33 PM
  • 0 Comments

பொதுத்தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் நாளை (27) முதல் தபால்மூலம் விநியோகிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் எதிர்வரும் நவம்பவர் மாதம் 14 நடைப்பெறவுள்ள. வாக்கெடுப்புக்கான சகல பணிகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு நிறைவு செய்துள்ளது. இம்முறை அரசியல் கட்சி சார்பில் 5,464 வேட்பாளர்களும் சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 3357 வேட்பாளர்களுமாக மொத்தம் அடிப்படையில் 8821 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தல்கள் ஆணைக்குழு வாக்காளர் அட்டைகளை இன்று தபால் திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது. தபால் சேவையாளர்களின் சகல விடுமுறைகளும் பொதுத்தேர்தல் நிறைவடையும் திகதி வரை […]

செய்திகள்

யாழில் கணவன் உயிரிழந்ததையடுத்து மனைவி தற்கொலை முயற்சி.

  • Oct 25, 2024 - 12:40 PM
  • 0 Comments

திருமணமாகி ஒரு வருடத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (24) சுகயீனம் அடைந்திருந்த நிலையில் யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சிவனேஸ்வரன் சிறிராஜ் என்ற இளம் குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். கணவனின் பிரிவை தாங்க முடியாத மனைவி பெருமளவு மாத்திரைகள் உட்கொண்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

செய்திகள்

நாமல் இன்றைய விசாரனைகளை முடித்து வெளியேறினார் .

  • Oct 24, 2024 - 01:17 PM
  • 0 Comments

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் 3 மணித்தியாலங்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இன்று காலை 09.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் வழங்குவதற்காக தமக்கு அழைப்பு வந்ததாகவும் எனவே வாக்கு மூலம் வழங்கியதாக தெரிவித்துள்ளார்.

செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டனிற்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  • Oct 23, 2024 - 12:58 PM
  • 0 Comments

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக உயர் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் முன்னிலையாகததால் நீதிமன்றம் பிடியாணையை பிறப்பித்துள்ளது.

செய்திகள்

அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் ஜனாதிபதி அநுர

  • Oct 22, 2024 - 09:33 PM
  • 0 Comments

அரிசி வியாபாரிகள் மற்றும் விவசாய திணைக்கள அதிகாரிகளுடன் ஜனாதிபதி இன்று கலந்துரையாடினாhர் ஒழுங்கமைக்கப்பட்ட விவசாயத் திட்டத்தை உருவாக்கி விவசாயிகள் அதிக நன்மைகளைப் பெறும் அடிப்படையில் நீண்டகால திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார் மக்களின் பிரதான உணவாக பயன்படுத்தப்படும் அரிசியின் விலையை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. நிர்ணய விலை அமுல்படுத்தப்பட்டதன் பின்னர் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்துள்ளதால் அதன் பின்னர் அரிசியின் விலையை மாற்றுவது நியாயமல்ல என அரிசி வியாபாரிகளிடம் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் அரிசியை […]

உலகம்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் கனடாவில் சுட்டுக்கொலை.

  • Oct 22, 2024 - 05:16 PM
  • 0 Comments

ஒன்ராறியோவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் பார்த்தீபன் என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஒன்ராறியோ மாநிலம், மார்க்கம் பகுதியில் வசித்து வந்த நிலையில் அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்றையதினம் (20-10-2024) அதிகாலை இனம்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp