உள்ளூர் செய்திகள்

தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படக்கூடாது – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

  • Dec 3, 2024 - 11:20 AM
  • 0 Comments

மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். ஆட்சிப் பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. […]

உள்ளூர் செய்திகள்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் எம்.பி பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

  • Dec 3, 2024 - 11:02 AM
  • 0 Comments

முஸ்லிம் காங்கிரஸைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசிய பட்டியலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட எஸ். எம். நளீம் இன்று (03) சபாநாயகர் அசோக ரன்வல முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை வென்றது. இதன்படி, கட்சிக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி ஒன்று கிடைத்துள்ளதுடன், அந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவரை நியமிக்க கட்சி தீர்மானித்திருந்தது. இவர் இதற்கு முன்பு ஏறாவூர் நகர சபையின் முன்னாள் […]

உள்ளூர் செய்திகள்

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று!

  • Dec 3, 2024 - 09:48 AM
  • 0 Comments

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான விவாதம் இன்றும் நாளையும் நடைபெற உள்ளதாகவும், அது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 5 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்ற தலைமைச் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பாராளுமன்றம் […]

இந்தியா செய்திகள்

மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிடுகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

  • Dec 2, 2024 - 09:54 AM
  • 0 Comments

ஃபெஞ்சல் புயலின் கோரத்தாண்டவம், விழுப்புரம் மாவட்டத்தையே புரட்டிப் போட்டுள்ளது. மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரக்கணக்கான குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். இதனிடையே அமைச்சர்கள் பொன்முடி, சிவசங்கர், செந்தில் பாலாஜி ஆகியோர் விழுப்புரம் மாவட்டத்தில் முகாமிட்டு வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு மீட்பு பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் […]

உள்ளூர்

பாணுக்கு கூட படமெடுப்பீர்களா?

  • Dec 2, 2024 - 07:41 AM
  • 1 Comment

நாட்டில் சீரற்ற காலநிலையால் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களின் போது மக்கள் பல்வேறுவிதமான சிக்கலுக்கு முகம் கொடுத்தனர். மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள அனர்த்தம் மற்றும் போக்குவரத்து தடை தொற்று நோய்கள் அடிப்படை தேவைகளான உணவு உறையுள் போன்றவற்றிக்கு கஸ்ட்டப்பட்டுக்கொண்டிருந்தார்கள். குறிப்பாக இடைத்தங்கல் முகாம்களிலும் வெள்ளம் வீட்டிற்கு சென்ற நிலையிலும் அதே வீட்டிலும் சிலர் வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில்; பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு மற்றும் சமைத்த உணவினை சிலர் வழங்கினார்கள். தொண்டு நிறுவனங்கள் […]

உள்ளூர் செய்திகள்

சிறீதரன் எம்.பி. கிளிநொச்சி அரச அதிபருடன் சந்திப்பு…!

  • Dec 2, 2024 - 07:25 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்ரமணியம் முரளிதரன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பானது நேற்று(01.12.2024) கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் குறிப்பாக, வெள்ளப் பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இடருதவிகளை வழங்குதல், இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்தல் உள்ளிட்ட அனர்த்த முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் புனரமைக்கப்பட வேண்டியுள்ள […]

உள்ளூர் செய்திகள்

மின்சார கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!

  • Dec 2, 2024 - 04:18 AM
  • 0 Comments

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரையை எதிர்வரும் 6ஆம் திகதி இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த பரிந்துரைகளை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர், பொறியியலாளர் ஏ.டி.கே. பராக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 22 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரைகளை முன்வைக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபையை அறிவுறுத்தியிருந்தது. பின்னர் மேலும் இரண்டு வாரகால அவகாசத்தை […]

உள்ளூர் செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைதான யாழ் இளைஞன் விளக்கமறியலில்

  • Dec 2, 2024 - 04:05 AM
  • 0 Comments

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் […]

செய்திகள்

கடற்றொழில் அமைச்சரும்; இந்திய உயர்ஸ்தானிகரும் சந்திப்பு

  • Dec 1, 2024 - 10:49 AM
  • 0 Comments

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் புதன்கிழமை (04) கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் இலங்கை, இந்திய மீனவர்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை அமையவுள்ளதாக கடற்தொழில் அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன அத்துமீறும் இந்திய மீனவர்கள் சம்பந்தமாக நெகிழ்ச்சித்தன்மையைக் காண்பிக்க முடியாது என கடற்தொழில் அமைச்சர் அறிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அத்துமீறும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துகின்றபோது அவற்றைக் […]

செய்திகள்

டீசல் மண்ணெண்ணெயின் விலைகள் அதிகரிப்பு

  • Dec 1, 2024 - 06:57 AM
  • 0 Comments

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது இன்று அமுலுக்கு வரும் வகையில் ளுipநவஉழ எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது ரூ.311 ஆக இருந்த 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு லீங்ஙர் ஒன்றின் விலை ரூ.309.00 ஆக விற்பனை செய்யப்படுகின்றது 283 ரூபாவாக இருந்த லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 286 ரூபாவாகும். அத்துடன் ரூ.183 ஆக […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp