செய்திகள்

இலங்கை ஜனாதிபதியை இந்திய ஜனாதிபதி, பிரதமர் வரவேற்பு

  • Dec 16, 2024 - 11:38 AM
  • 0 Comments

இந்தியாவுக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவை இன்று திங்கட்கிழமை (16) இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் இணைந்து வரவேற்றனர். இந்த சம்பிரதாயபூர்வ வரவேற்பானது புது டில்லியில் உள்ள இந்திய ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.  

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார் பாகிஸ்தான் வீரர் மொஹமட் அமீர்

  • Dec 16, 2024 - 12:14 AM
  • 0 Comments

32 வயதான மொஹமட் அமீர் 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இவர் இதுவரையில் 36 டெஸ்ட், 61 ஒருநாள் மற்றும் 62 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அத்துடன் ‘பாகிஸ்தான் அணிக்காக 3 வடிவங்களிலும் விளையாடுவது மிகப்பெரிய கௌரவம். இது ஒரு கடினமான முடிவு, ஆனால் அடுத்த தலைமுறைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை ஒரு புதிய நிலைக்குக் கொண்டு செல்ல இது சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன்.’என மொஹமட் அமீர் […]

செய்திகள்

காணிகளை விடுவிக்க கால எல்லை ஒன்றை நிர்ணயிக்க வேண்டும் -சிறிதரன் எம்பி தெரிவிப்பு ;

  • Dec 15, 2024 - 10:59 PM
  • 0 Comments

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பினா இங்கு உரையாற்றிய சிறிதரன் மேலும் தெரிவிக்கையில், ‘யாழ் மாவட்டத்தில் இராணுவ பிடியில் காணி விடுவிப்பதற்கு கால எல்லையை நிர்ணயிக்க முடியுமா? ஒரு கால எல்லையை நிர்ணயித்து செயல்படும்போதுதான் அதற்கான வேலைத்திட்டங்களை செயல்படுத்த முடியும். புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நிலையில் காணி விடுவிப்பு வெகு விரைவாக செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் […]

செய்திகள்

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மிகவும் அக்கறையுடன் செயலாற்றுவதாக பிரிட்டன் தெரிவித்துள்ளது

  • Dec 8, 2024 - 07:27 AM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதையும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதையும் முன்னிறுத்தி பிரிட்டன் தொடர்ந்தும் கரிசனையுடன் செயலாற்றிவருவதாகத் தெரிவித்திருக்கும் அந்நாட்டு இந்தோ – பசுபிக் விவகார அமைச்சர் கத்ரின் வெஸ்ட், எதிர்வருங்காலத்தில் தடை விதிக்கப்படக்கூடிய பதவிகள் குறித்த யூகங்களை வெளியிடுவதானது, அத்தடைகளால் ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைத்துவிடும் என சுட்டிக்காட்டியிருக்கிறார். பிரிட்டன் பொதுத்தேர்தலில் தொழிற்கட்சியின் வெற்றியை அடுத்து, புதிய பிரதமராகத் தெரிவான கெய்ர் ஸ்டார்மருக்கு வாழ்த்துத்தெரிவித்து பிரித்தானிய தமிழர் பேரவை கடந்த ஜுலை மாதம் 5 ஆம் […]

செய்திகள்

ஸ்பெயின் நாட்டுப் பெண் சுற்றுலாப் பயணியை தாக்கி கைப்பேசியை பறித்த இருவருக்கு விளக்கமறியல்

  • Dec 6, 2024 - 05:53 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற உடரட்ட மெனிக்கே தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண்ணொருவரை தடியால் தாக்கிவிட்டு, அவரது கையடக்கத் தொலைபேசியை பறித்ததாக கூறப்படும் இருவர் வட்டவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். விசாரணைகளின் பின்னர், இரு சந்தேக நபர்களும் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டபோதுஇருவரையும் எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொசல்ல மற்றும் விக்டன் பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும் 26 வயதுகளை […]

செய்திகள்

சிறுமி கொலை சிறுமியின் தாயின் இரண்டாவது கணவர் கைது

  • Dec 6, 2024 - 01:20 PM
  • 0 Comments

14 வயது சிறுமி கொலை செய்து சடலத்தை கட்டுமான வேலை நடைப்பெற்று வந்த கழிவறை குழியில் வீசிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹாவில் இந்த கொடூர சம்பவம் நடைப்பெற்றுள்ளது கடந்த 2ஆம் திகதி முதல் தனது 14 வயது மகள் காணாமல் போயுள்ளதாக கம்பஹா, அகரவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் நேற்று (5) இரவு கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். 14 வயது சிறுமி காணாமல் போனதன் பின்னிணியில் தனது இரண்டாவது கணவர் மீது சந்தேகம் […]

உள்ளூர்

நெற்பயிரை காப்பாற்றுமாறு விவசாயிகள் போராட்டம்

  • Dec 5, 2024 - 06:53 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி நாவற்காடு கிராம விவசாயிகள் இன்று வயலில் இறங்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையைத் திறந்து விட்டு தமது நெற் பயிர்களை அழிவில் இருந்து காப்பாற்றக் கோரியே விவசாயிகள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொண்டமனாறு தடுப்பணையை மூடி வைத்திருப்பதால் தென்மராட்சி வரணிப் பிரதேச வயல்களில் தேங்கி நிற்கும் மேலதிக நீர் வடிந்து செல்ல முடியாமல் வயல் நிலங்களில் தேங்கி பயிரை அழிவடையச் செய்வதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்  

செய்திகள்

வடகிழக்கில் புயலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என்கிறார் பிரதீபராஜா

  • Dec 5, 2024 - 06:40 PM
  • 0 Comments

எதிர்வரும் 7 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது என யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார் காலநிலை தொடர்பில் கருத்து வெளியிடு;கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வங்காள விரிகுடாவில் மீண்டும் உருவாகும் காற்றுச் சுழற்சியை பொறுத்தவரையில், அது உருவாகியதன் பின்னர் மிக மெதுவாக மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த மூன்று நாட்களில், […]

செய்திகள்

ஒரு துப்பாக்கி மாத்திரமே பாதுகாப்பிற்காக வழங்கப்படும் – பாதுகாப்பு அமைச்சு

  • Dec 4, 2024 - 01:13 PM
  • 0 Comments

நபர் ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்படும் துப்பாக்கிகளின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவர் தனது தனிப்பட்ட பாதுகாப்புக்காக ஒன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கிகளை வைத்திருக்க வேண்டுமானால் பாதுகாப்பு அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது சிவில் பாதுகாப்பு அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. சிவில் பாதுகாப்பு […]

உள்ளூர் செய்திகள்

ஜனாதிபதியின் சிம்மாசன உரை மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது – சிறீதரன் எம்.பி

  • Dec 4, 2024 - 02:46 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது சிம்மாசன உரையில் தமிழ் மக்களை தவிர்த்திருந்த நிலையில், அவர் நாட்டில் அடையாளம் தெரியாமல் போனதை நினைவுகூறுமாறு யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் (3) உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றில் தொடர்ந்து உரையாற்றிய சிவஞானம் சிறீதரன், ‘ஜனாதிபதி தனது சிம்மாசன உரையில், 80 வருடங்களாக புரையோடியிருக்கின்ற இனப்பிரச்சினை தவிர்த்திருந்தது மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. யுத்தம் காரணமாக வாங்கிய கடன்கள் காரணமாகவே நாடு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp