தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் வழங்குவதற்கு பதிலாக, ஓய்வுக்கால ஓய்வூதியமாக வழங்கும் புதிய முறையை அறிமுகப்படுத்த அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தொழிலாளர் துறை பிரதிப் அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், ஊழியர்கள் ஓய்வுபெற்ற பின்னர் அவர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக கூறினார்.
எனினும், ஊழியர் சேமநல நிதி தொகையை ஒரே தடவையில் பெற்றுக்கொள்ளும் போது, தனியார் துறை ஊழியர்களின் ஓய்வுக்கால சமூக பாதுகாப்பு பாதிக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனை கருத்தில் கொண்டு, தனியார் துறை ஊழியர்களுக்கும் அரச ஊழியர்கள் போன்று ஓய்வூதிய முறையில் தொடர்ச்சியான வருமானம் கிடைக்கச் செய்யும் வகையில், ஓய்வூதிய திட்டம் போன்ற ஒரு புதிய அமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.
