இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய (05.04.2026) சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை சுப்பர் கிங்ஸ் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் டிம் டேவிட் 25 பந்துகளில் 70 ஓட்டங்களை அதிரடியாக விளாசினார்.
இந்நிலையில் 251 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 19.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 207 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.
நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் சென்னை அணி பங்கேற்றுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் உள்ளது.
அத்துடன் பெங்களுரு அணி பங்கேற்றுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது
What’s your Reaction?
