உரிமம் இல்லாமல் பெட்ரோல் இருப்பை சேமித்து வைத்திருந்த ஒருவர் நேற்று (02.03.2026) பிற்பகல் பேருவளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் பேருவளை, வலத்தர பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இரகசிய தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின் போது பிளாஸ்டிக் கொள்கலனில் பெட்ரோலுடன் கைது செய்யப்பட்டத்தாக பேருவளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வரை பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
