கட்டுரை

பணத்தோடு பரவும் போதை – உயர்சமூகத்தில் உயரும் அபாயம்

  • Jan 15, 2026 - 12:59 PM
  • 0 Comments

இலங்கையில் போதைப்பொருள் பயன்பாடு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், செல்வாக்கு மிகுந்த சமூகத்தினரும், உயர்ந்த வருமானம் கொண்டவர்களும் இதில் அதிகமாக ஈடுபடத் தொடங்கியிருப்பது கவலைக்குரியதாகியுள்ளது. தொழில்முறை நிபுணர்கள், வசதியான இளைஞர்கள் மற்றும் உயர்சமூகத்தைச் சேர்ந்த ஆண், பெண்களிடையே போதைப்பொருள் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளதாக காவல்துறையும் தரவுகளும் சுட்டிக்காட்டுகின்றன. 2025 ஜனவரி முதல் 2026 ஜனவரி ஆரம்பம் வரை, ஹெரோயின், ‘ஐஸ்’ எனப்படும் மெத்தாம்பெட்டமின், கஞ்சா, கோகெயின் மற்றும் இலட்சக்கணக்கான போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இருப்பினும், கைப்பற்றப்பட்ட […]

விளையாட்டு

வாஷிங்டன் சுந்தர் காயம்: இந்தியா-நியூசிலாந்து டி20 தொடரில் விலகல்

  • Jan 15, 2026 - 12:34 PM
  • 0 Comments

தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த பின்னர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளார். காயம் குணம் அடையாததால், அவர் வரும் ஜனவரி 21-ம் தேதி நடைபெறவிருக்கும் முதல் டி20 போட்டியிலும் பங்கேற்கமுடியாது. இது 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி சமநிலையில் இருப்பதை மேலும் சவாலாக்கியுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரில், […]

உலகம்

சிங்கப்பூர் கடவுச்சீட்டு உலகின் சக்தி மையம்: 3வது வருடமும் முதலிடம்

  • Jan 15, 2026 - 12:25 PM
  • 0 Comments

ஹென்லி பாஸ்போர்ட் 2026 பட்டியலில் சிங்கப்பூர் குடிமக்கள் 193 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை என்பதால் தொடர்ந்து 3வது ஆண்டாக உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட்டாக தக்கவைத்துள்ளனர். ஜப்பான் மற்றும் தென்கொரியா இரண்டாவது இடத்தில், டென்மார்க், ஸ்பெயின், சுவீடன் மற்றும் சுவிட்சர்லாந்து மூன்றாவது இடத்தில் உள்ளன. இவர்கள் 186 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய முடிகிறது. அமெரிக்கா பாஸ்போர்ட் 10வது இடத்தில், 179 நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கிறது. இந்தியா 85வது இடத்தில் உள்ளது. இந்த பட்டியல் உலக […]

உலகம்

பாங்காக்கில் ரெயில் விபத்தின் பலி எண்ணிக்கை 32 அதிகரிப்பு

  • Jan 15, 2026 - 12:23 PM
  • 0 Comments

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து வடகிழக்கில் உள்ள உபோன் ராட்சதானி மாகாணத்துக்குச் சென்ற ரெயிலில் பயணம் செய்த 195 பேரில் 32 பேர் உயிரிழந்தனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து நக்கோன் ராட்சசிமா மாகாணம் சிக்கியோ மாவட்டத்தில் ஏற்பட்டது. அதிவேக ரெயில் பாதை அமைக்கும் பணிக்காக பயன்படுத்தப்பட்ட ராட்சத கிரேன் திடீரென்று சரிந்து ரெயில் மீது விழுந்தது. கிரேன் விழுந்த போது ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு கவிழ்ந்ததில், ரெயில் தீப்பிடித்து எரிந்தது. மீட்புக் குழு சம்பவ […]

உள்ளூர் செய்திகள்

சீன நிதியுடன் 900 ஸ்மார்ட் வகுப்பறைகள்: பாடசாலைகளில் டிஜிட்டல் மாற்றம் ஆரம்பம்

  • Jan 15, 2026 - 09:28 AM
  • 0 Comments

கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய முன்னுரிமைகள் பாடசாலைகளுக்கிடையிலான டிஜிட்டல் சமநிலை குறைபாடுகளை குறைக்கவும், மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது பாதுகாப்பு உறுதி செய்யவதகவும் இருக்க வேண்டும் என பிரதமரும் கல்வி அமைச்;சருமான கலாநிதி; ஹரிணி அமரசூரியா, தெரிவித்தார். நேற்று நடத்தப்பட்ட கல்வி டிஜிட்டல் வழிகாட்டல் தொடக்க விழாவில் அவர் பேசுகையில், முறையான டிஜிட்டல் வசதிகள் இல்லாத பாடசாலைகள் அடையாளம் கண்டு, அனைத்து மாணவர்களுக்கும் சமமான வாய்ப்பi வழங்க வழி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டார். மேலும், தொழில்நுட்பத்தை குழந்தைகளுக்கு பாதுகாப்பான, […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கல்வி மாற்றங்கள் பின்னணியில் அரசுப் பணம் வீணடிப்பு – ரோஹிணி குமாரி குற்றச்சாட்டு

  • Jan 15, 2026 - 08:57 AM
  • 0 Comments

ஆறாம் தர கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான நிதி இழப்புகள் குறித்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கி மக்கள் சக்தி இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆனைக்குழுவில் முறையிட பரிசீலிக்கிறதென நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி குமாரி விஜேரத்ன கவிரத்ன தெரிவித்துள்ளாhர் புதிய பாடத் தொகுதிகளை தயாரித்து அச்சிடுவதில் ஏற்பட்ட செலவுகள் தற்போது மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்பதால், இழந்த நிதியைப் பொறுப்பானவர்களிடமிருந்து மீட்டெடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி வலியுறுத்துகிறது. சமகி ஜன பலவேகய நாடாளுமன்ற உறுப்பினர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வேலைக்கும் வாழ்க்கைக்கும் சமநிலை: பெண்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி?

  • Jan 15, 2026 - 08:35 AM
  • 0 Comments

பெண்கள் அரசுத்துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து பணியாற்ற அனுமதி வழங்கும் யோசனை குறித்து பரிசீலனை செய்யப்படுவதாக பெண்கள் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்வைத்த பரிந்துரையின் அடிப்படையில், இது தொடர்பாக உரிய தரப்புகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் என பெண்கள் விவகார அமைச்சின் பிரதி அமைச்சர் வைத்திய கலாநிதி நாமல் சுதர்ஷன தெரிவித்தார். இந்த யோசனை செயல்திறன் மிக்கதும், தற்போது மிகவும் அவசியமானதும், முன்னேற்றகரமானதுமாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். தென்னாசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் […]

செய்திகள் உள்ளூர் முக்கிய செய்திகள்

நம்பிக்கை பேசுகிறது… நகரம் வளர்கிறது – போர்ட் சிட்டிக்கு 300 மில்லியன் டொலர் உறுதி

  • Jan 15, 2026 - 08:23 AM
  • 0 Comments

கொழும்பு துறைமுக நகரத் திட்டத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்காக,; 300 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வெளிநாட்டு நேரடி முதலீட்டை வழங்க சி.எச்.ஈ.சி போர்ட் சிற்றி (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் உறுதி அளித்துள்ளது புதிய ஆண்டின் ஆரம்பத்திலேயே மேற்கொள்ளப்பட்ட இந்த முதலீட்டு உறுதி, இலங்கையின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி மீதான நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான ஒழுங்குமுறைச் செயல்முறைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கையின் மிகப்பெரிய நகர அபிவிருத்தித் திட்டமான கொழும்பு துறைமுக […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

10நாள் பொறுமை… 23 அன்று போராட்டம்? மருத்துவர்களின் மிரட்டலும் அமைச்சரின் மௌனமும்

  • Jan 15, 2026 - 07:58 AM
  • 0 Comments

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தி கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ இடையே சமீபத்தில் எட்டப்பட்ட உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசுக்கு 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை அதாவது 13 ம் திகதி நடைபெற்ற அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நிறைவேற்று குழு கூட்டத்தில், எதிர்வரும் 23 ஆம் திகதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டதாக நேற்று […]

"ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆசிரியர்களுடன் புதிய கல்வி மறுசீரமைப்பில் இணக்கப்பாடுகளை உறுதி செய்கிறார்" உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடக்கே வழி… விழாவும் வளர்ச்சியும்—ஜனாதிபதியின் இரு நாள் பயணம்

  • Jan 15, 2026 - 07:50 AM
  • 0 Comments

மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு அரச மற்றும் மக்கள் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (15) மற்றும் நாளை (16) வடக்கிற்கு அதிகாரபூர்வ விஜயம் மேற்கொள்கிறார். இன்று பிற்பகல் 2 மணிக்கு யாழ்ப்பாணம், வேலணை ஐயனார் கோவில் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் வட மாகாண தைப்பொங்கல் விழாவில் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார். அதனைத் தொடர்ந்து, சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் நோக்கில் யாழ்ப்பாண சுற்றுலா சபையால் மானிப்பாய் மருதடி விநாயகர் கோவிலில் ஏற்பாடு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp