பணிப்புறக்கணிப்பு இடைநிறுத்தம்: கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சேவைக்கு திரும்பினர்
இன்று (22) காலை 8 மணி முதல், அரசு கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் நேற்று (21) தொடங்கிய பணிப்புறக்கணிப்பை தற்காலிகமாக இடைநிறுத்தி, சேவைகளை வழமைப்படி வழங்க ஆரம்பித்துள்ளது. இந்த முடிவு, நேற்றைய இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் நடைபெற்ற முக்கிய பேச்சுவார்த்தையின் போது எட்டப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப ஏற்பட்டது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையில் நடந்த சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல்பாடுகள் தொடர்பாக ஏற்கனவே துரித விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளது. சங்கத்தின் கோரிக்கைக்கு ஏற்ப, ஒரு […]









