உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தரமற்ற நிலக்கரி? நுரைச்சோலை மறுப்பு

  • Jan 29, 2026 - 08:38 AM
  • 0 Comments

நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் நிலையத்தில் தரமற்ற நிலக்கரி பயன்படுத்தப்படுகின்றதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை எரிசக்தி அமைச்சு மறுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக உள்ளூர் நிலக்கரி நிறுவனத்திடமிருந்து தர அறிக்கை கோரப்பட்டுள்ள நிலையில், இதுவரை மின் நிலையம் எந்தவிதப் முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை என அமைச்சு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எரிசக்தி அமைச்சு செயலாளர் மற்றும் இடைக்கால இலங்கை மின்சார சபை தலைவர் பேராசிரியர் உதயங்க ஹேமபால, குறித்த தரமற்றதாக கூறப்படும் நிலக்கரி கேள்வி கோரல் தொடர்பான அறிக்கை […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு

  • Jan 28, 2026 - 07:01 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான விசாரணைகள் ஒரு மாதத்திற்குள் நிறைவு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதத்தில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமா அதிபர் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார். கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விளக்க மறியலில்

  • Jan 28, 2026 - 06:50 PM
  • 0 Comments

ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று முன்னிலையான போதே சமன் ஏக்கநாயக்கவை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதபதி இசுரு நெத்திகுமார உத்தரவுட்டுள்ளார். இவ்வழக்கின் இரண்டாவது சந்தேகநபராக சட்டமா அதிபரினால் பெயரிடப்பட்டுள்ள அவரது முன்னாள் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் பிப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் […]

செய்திகள் கட்டுரை

கிவுள் ஓயா (Kivul Oya) நீர்த்தேக்கத் திட்டம் மீண்டும் கவனத்திற்கு – உள்ளூரில் எதிர்ப்பும், அரசின் முன்னேற்ற முயற்சியும்

  • Jan 28, 2026 - 06:12 PM
  • 0 Comments

வட மாகாணத்தின் வவுனியா வடக்கு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ள கிவுள் ஓயா (Kivul Oya) நீர்வளப் பகுதியை மையமாகக் கொண்டு முன்மொழியப்பட்டுள்ள நீர்த்தேக்கத் திட்டம் மீண்டும் அரசியல் மற்றும் சமூக விவாதத்தின் மையமாக மாறியுள்ளது. நீர்வள முகாமைத்துவத்தை மேம்படுத்துவது, வறட்சி காலங்களில் விவசாயத்திற்கு நிலையான நீர்வழங்கலை உறுதி செய்வது, மற்றும் பிராந்திய அபிவிருத்தியை விரைவுபடுத்துவது ஆகிய நோக்கங்களுடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப்படும் கிராமப்புற விவசாயிகளுக்கு இந்தத் […]

செய்திகள் கட்டுரை

கியூள் ஓயாத் திட்டம்: அபிவிருத்தியும் நில உரிமையும் – ஒரு சமநிலை நோக்கு

  • Jan 28, 2026 - 05:24 PM
  • 0 Comments

இலங்கையின் வடக்கு மாகாணத்தில், குறிப்பாக வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கியூள் ஓயா (முiஎரட ழுலய) நீர்ப்பாசனத் திட்டம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. வறண்ட வலய விவசாயிகளின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம், இன்று நில உரிமை மற்றும் இன விகிதாசார மாற்றங்கள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓர் ஆய்வுக் கட்டுரையாக, உணர்ச்சிகரமான கோசங்களைத் தாண்டி இதன் சட்ட மற்றும் சமூக யதார்த்தங்களை ஆராய்வது அவசியமாகிறது. 1. அரசின் நிலைப்பாடு: பொருளாதாரப் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மருத்துவர்கள் பேச்சுவார்த்தை தவிர்த்தால் நடவடிக்கை தீவிரம்

  • Jan 28, 2026 - 08:58 AM
  • 0 Comments

அரசாங்கம் எந்தவொரு தொழிற்சங்க அச்சுறுத்தல்கள் அல்லது மிரட்டல்களுக்கு அடிபணியாமல், தன்னிச்சையாக தீர்மானங்களை எடுக்கப்போவதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் மனிதவள பற்றாக்குறையை குறைத்து மக்களுக்கு தரமான சேவை வழங்குவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காகும் என அவர் குறிப்பிட்டார். இதை அவர் சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 213 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வெளியிட்டார். அரசு, வெளிநாடுகளில் அதிக சம்பளக் கோரிக்கைகளை முன்வைத்து நாட்டை விட்டு வெளியேறப்போதாக […]

முக்கிய செய்திகள் உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மீண்டும் நீதிமன்றம் முன்

  • Jan 28, 2026 - 08:47 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக தொடரும் வழக்கு, கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் இன்று (28) மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது. வழக்கில் குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டிருப்பது, அவர் ஜனாதிபதியாக இருந்த போது, உத்தியோகபூர்வ பயணம் என கூறி, தனிப்பட்ட பயணமாக லண்டனுக்குச் சென்று, பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்ததாகும். நீதி மன்றம் இன்று வழக்கின் அடுத்த விசாரணை கட்டத்தை முன்னெடுக்கப்போகும் நிலையில், வழக்கின் தீர்ப்பு பொது கவனத்திற்கும் அரசியல் ஆர்வத்திற்கும் முக்கியமானதாக இருக்கும் என […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

கனவல்ல நிஜம்: கலைஞர்களுக்கும் கிடைக்கிறது அரசு இல்லம்!

  • Jan 28, 2026 - 07:55 AM
  • 0 Comments

கொழும்பு நகரில் நிலவும் அதிகப்படியான வீட்டு வாடகையினைக் கட்டுப்படுத்தி, சாமானிய மக்களும் வசிக்கக்கூடிய சூழலை உருவாக்கும் நோக்கில், தனியார் துறைக்கு சவாலாக அரசாங்கமே மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகளை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது. கொழும்பில் பணிபுரிந்து கொண்டு, தினசரி நெடுந்தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலனைக் கருத்திற்கொண்டு இந்த விசேட திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர்வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சின் பிரதி அமைச்சர் டி.பி. சரத், கொழும்பு நகரில் பணிபுரிவோர் தங்களது […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வடகிழக்கு மாகாணத்திற்கு ஆசிரியர் ஆட்சேர்ப்பில் மோசடி

  • Jan 28, 2026 - 07:28 AM
  • 0 Comments

இலங்கையில் 2026 ஆம் ஆண்டில் 23,000 ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவார்கள் என்ற உத்தியோகப்பூர்வ அறிவிப்பு துல்லியமற்றது என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் தற்போது 40,000-க்கும் அதிகமான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில், வழங்கப்பட்டிருக்கும் அனுமதிகள் சுமார் 6,000 ஆசிரியர்களை மட்டும் ஆட்சேர்ப்பு செய்யக்கூடிய அளவிலேயே உள்ளன என சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கம் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ, ஆசிரியர் நெருக்கடியை தீர்க்கக்கூடிய நடைமுறை திட்டம் அரசிடம் இல்லை என்று […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நியமனம் தாமதம்: ஜனாதிபதிக்கு சங்கட கடிதம்

  • Jan 28, 2026 - 07:06 AM
  • 0 Comments

நிரந்தர கணக்காய்வாளர் நியமனத்தில் நீண்டகால தாமதம் ஏற்பட்டுள்ளதற்கு இலங்கையின் உயர் பீட மகாநாயக்கர்கள் இணைந்து ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் எழுதி கவலை வெளியிட்டுள்ளனர். அரசுப் பணவழங்கல்களில் வெளிப்படைத்தன்மையும் பொறுப்புணர்வும் உறுதி செய்யும் தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் தலைவராக வெளிப்புற நபரை நியமிப்பது பொருத்தமற்றது என்ற கருத்தையும் அவர்கள் முன்வைத்துள்ளனர். கணக்காய்வாளர் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட மூத்த அதிகாரியான தர்மபால கம்மன்பிள்ளை அந்தப் பதவிக்கு மிகத் தகுதியானவர் என தாங்கள் கருதுவதாக மகாநாயக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp