செய்திகள்

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டு நீதிமன்றமே நீதி வழங்கும் -ஜேவிபி தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 11:22 AM
  • 0 Comments

  வெளிநாட்டுத் தலையீடின் கீழ் இலரங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளை எட்டி உதைத்து விட்டே பல நாடுகளும் செயற்படுகின்றன. தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிமல் ரத்நாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் எமது […]

செய்திகள்

மகிந்தவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிச்சயமாக இரத்துச் செய்யப்படும்- ஜனாதிபதி அனுர தெரிவிப்பு.

  • Oct 28, 2024 - 10:46 AM
  • 0 Comments

  முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கியுள்ள சிறப்புரிமைகள் மற்றும் சலுகைகள் அனைத்தும் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுரகுமார தெரிவித்துள்ளார். தென்னிலங்கையில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முன்னாள் ஜனாதிபதிகளை பராமரிப்பது மக்களின் வேலையில்லை என தெரிவித்துள்ள அவர் சுற்றுநிரூபங்கள், நாடாளுமன்ற சட்டங்கள் அரசமைப்பு ஏற்பாடுகளின் அடிப்படையிலேயே முன்னாள் ஜனாதிபதிகளிற்கு விசேட சிறப்புரிமைகள் வழங்கப்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் ஜாதகம் பார்ப்பதாக வந்த பெண்ணின் திருவிளையாடல்.

  • Oct 28, 2024 - 02:13 AM
  • 0 Comments

மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் ஜாதகம் பார்ப்பதாக கூறி வீட்டில் இருந்தவர்களை சுய நினைவை இழக்கச் செய்து சுமார் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், நறுவிலிக்குளம் கிராமத்தில் உள்ள வீடு ஒன்றுக்கு சிறுவன் ஒருவருடன் சென்ற பெண் ஒருவர் கோவிலுக்கு நிதி சேகரிக்க வந்துள்ளதாக கூறியுள்ளார். இந்த […]

உள்ளூர் செய்திகள்

டெல்லிக்கு செல்லவுள்ள ஜனாதிபதி அநுர.

  • Oct 28, 2024 - 01:55 AM
  • 0 Comments

இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் உயர்மட்ட குழு ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளது. இந்த விஜயத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர். இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கையளிக்க உள்ளதுடன், அவரது விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற தேர்தல் […]

உள்ளூர்

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்கு ஜனாதிபதி திட்டம்.

  • Oct 28, 2024 - 01:40 AM
  • 0 Comments

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் […]

உள்ளூர் செய்திகள்

நாட்டில் எந்தவொரு ஆபத்தான அச்சுறுத்தல்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

  • Oct 28, 2024 - 01:20 AM
  • 0 Comments

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுநிலை எயார் வைஷ் மார்ஷல் எச்.எஸ்.சம்பத் துய்யகொந்த ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, நாட்டின் பிரதான சுற்றுலாத்தளங்களை மையப்படுத்திய தாக்குல்கள் நடத்தப்படவுள்ளதாக எமக்கு புலனாய்வுக் கட்டமைப்புக்களுக்கு ஒக்டோபர் முதல் வாரத்திலேயே தகவல்கள் கிடைத்திருந்தன. இதனையடுத்து தேசிய பாதுகாப்புச் சபை உடனடியாக கூட்டப்பட்டு எடுக்கப்பட வேண்டிய அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், இவ்விடயம் சம்பந்தமாக வெளிநாடு தனது பயணிகளுக்காக முன்னெச்சரிக்கையை விடுத்திருந்தது. அதனையடுத்தே விடயம் பகிரங்கமானது. ஆனால் அதற்கு முன்னதாகவே சுற்றுலாத்தளங்கள் உட்பட நாட்டின் […]

உள்ளூர் செய்திகள்

அநுர அரசு மூன்று மாதங்களிற்கு மேல் நீடிக்காது – முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

  • Oct 28, 2024 - 01:12 AM
  • 0 Comments

நீர்கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, மேலும் குறிப்பிட்டுள்ளதாவது தனக்கும் பெரும்பான்மை இருக்கவில்லை அனுரகுமார திசநாயக்கவிற்கும் பெரும்பான்மையில்லை என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அப்படியென்றால் தங்கள் இருவருக்கும் இடையில் என்ன வித்தியாசம் என கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலில் தோல்வியடைந்தால் தன்னை வீட்டிலிருக்குமாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார் தனக்கு பெரும்பான்மையானவர்கள் வாக்களிக்கவில்லை என்பதை தான் ஏற்றுக்கொள்கின்றேன். தான் பெரும்பான்மை இல்லாத முன்னாள் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதி என ரணில் […]

செய்திகள்

யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் முதியவரின் சடலம் மீட்பு.

  • Oct 27, 2024 - 05:15 PM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தில் தனிமையில் வசித்துவந்த வயோதிபர் ஒருவர் அவரது வீட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 79 வயதுடைய திருநெல்வேலி கேணியடி பகுதியை சேர்ந்தவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நல்லூர் பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நேற்று (26) டெங்கு ஒழிப்பு கள விஜயத்தின் போதே முதியவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார், அதிகாரிகள் முதியவரின் வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டி மீது விழுந்த நிலையில் முதியவர் இறந்து போயுள்ளார். உடனடியாக அதிகாரிகள் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ […]

செய்திகள்

ஈஸ்ட்டர் தாக்குதல் தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கலாம்- சுமந்திரன்

  • Oct 27, 2024 - 05:06 PM
  • 0 Comments

ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை வெளிவந்த அறிக்கைகளையும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகியவற்றையும் அடிப்படையாக வைத்து நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். உதயகம்மன்பில உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள தகவல்கள் மற்றும் அறிக்கைகளின் உள்ளடக்கம் சம்பந்தமாக கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈஸ்ட்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனத் டி சில்வா தலைமையிலான அறிக்கை நியாயமானது என சமந்திரன் தெரிவித்துள்ளார். உயிர்த்த […]

செய்திகள்

இணையவழி மோசடிகள் குறித்து மக்கள் விளிப்பாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை.

  • Oct 27, 2024 - 04:54 PM
  • 0 Comments

இணையம் ஊடாக மக்களின் பணம் கொள்ளையிடப்படும் சம்பவங்கள்; அதிகரித்து வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையம் ஊடாக மக்களிடம் பணத்தை கொள்ளையடித்த வெளிநாட்டினரும் நம் நாட்டவர்களும் அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களை தவிரவும் சமூக ஊடகங்கள் மூலம் அடையாளம் காணப்பட்ட நடுத்தர வயது மற்றும் முதியவர்களுடன் போலியான காதல் உறவுகளை உருவாக்கியும் பணமோசடி நடைப்பெற்று வருகின்றது. அத்துடன் சமூகத்தில் பிரபலமானவர்கள் போல் பாசாங்கு காட்டி பணம் பெறும் செயற்பாடுகளும் இந்த நாட்களில் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp