உக்ரைன் தலைநகர் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்!
உக்ரைன் தலைநகர் கீவ் -இல் ரஷியா பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 6 தூதரகங்கள் மற்றும் ஒரு பழமையான தேவாலயம் சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 12 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை உறுதிப்படுத்திய உக்ரைன் விமானப்படை, உக்ரைனின் வான் பாதுகாப்புப் படைகள் ரஷிய படைகளால் ஏவப்பட்ட 5 இஸ்கந்தர்-எம்ஃகேஎன்-23 பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்ததாகவும், உயிரிழப்புகளைத் தடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. நகரின் மையப்பகுதி முழுவதும் பலத்த வெடிச் சத்தங்கள் கேட்டன. கட்டிடங்களில் தீ பற்றி […]









