செய்திகள்

அரிசி விலையை அநுர கூட்டியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி குற்றச்சாட்டு

  • Jan 6, 2025 - 08:46 PM
  • 0 Comments

அரிசி தட்டுப்பாட்டுக்கு தீர்வினை வழங்குவதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு நன்மை கிடைக்கும் வகையில் விலையை ஜனாதிபதி அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் ஒரு கிலோ அரிசியை 300 ரூபாவுக்கு வாங்க வேண்டிய நிலைமை நாட்டு மக்களுக்கு ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி மேலும் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி இவ்வாறு […]

செய்திகள்

நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு – ஜனாதிபதி

  • Jan 6, 2025 - 06:35 PM
  • 0 Comments

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சட்டமா அதிபர் உள்ளிட்ட சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. நீதித்துறை கட்டமைப்பின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சட்டமா அதிபர் திணைக்களத்தின் பொறுப்பு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் அரசியல் அதிகாரத்தின் மீதான மக்களின் அபிப்பிராயங்களை மாற்றி நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என இதன் போது ஜனாதிபதி அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்டியுள்ளார்

செய்திகள்

யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் கையெழுத்துப் போராட்டம் தொடர்கின்றது

  • Jan 6, 2025 - 05:42 PM
  • 0 Comments

அரசியல் கைதிகளின் விடுதலை வலியுறுத்தி போராளிகள் நலன்புரிச் சங்கத்தால் முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டம் இன்று திங்கட்கிழமை (06) யாழ்ப்பாணம் மடத்தடி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. வடமாகாணத்தில் வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, ஆறு நாட்கள் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி, ஏழாவது நாளாக இன்று யாழ் மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இக் கையெழுத்து போராட்டத்தில் அரசியல்வாதிகள் உட்பட பலரும் கையெழுத்திட்டனர்  

செய்திகள்

கோட்டா அரசின் தேத்தண்ணி செலவு 287,340 ரூபா அநுர அரசின் தேத்தண்ணி செலவு 339,628.55 சதம்

  • Jan 6, 2025 - 05:29 PM
  • 0 Comments

பாராளுமன்ற செலவுத் தலைப்பின் கீழ் சம்பிரதாயமாக நடத்தப்படும் நிகழ்வுகள் மற்றும் தேநீர் விருந்துபசாரத்திற்காக ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வில் 287,340 ரூபா செலவிடப்பட்டுள்ளது பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது நாள் அமர்வின் பின்னர் நடத்தப்பட்ட தேநீர் விருந்துபசராத்திற்கு 339,628.55 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளது இதற்கான காரணம் உணவுப் பொருட்களைத் தயாரிப்பதற்கான செலவுகள் 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2024ஆம் ஆண்டில் அண்ணளவாக 100 வீதத்தினால் அதிகரித்துள்ளன என அநுர அரசு தெரிவித்துள்ளது பாராளுமன்ற தேனீர் செலவுக்கு தான் உணவு தயாரிக்க […]

செய்திகள்

எலிக்காய்ச்சலால் கிளிநொச்சியில் இருவர் உயிரிழப்பு!

  • Jan 6, 2025 - 05:10 PM
  • 0 Comments

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சல் நோய்க்காரணியால் இருவர் உயிரிழந்திருக்கலாம் என கிளிநொச்சி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வைத்தியர் த.வினோதன் சந்தேகம் வெளியிட்டுள்ளார் இன்றைய தினம் கிளிநொச்சியில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். கிளிநொச்சியின் முழங்காவில் மற்றும் கண்டாவளைப்பகுதிகளில் குறித்த இருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே மக்கள் காய்ச்சல் ஏற்பட்டால் மற்றும் தசைநோ, கண்சிவத்தல், சுவாசப்பிரச்சனைகள் போன்றவை காணப்பட்டாலும் உடனடியாக வைத்திய பரிசோதனை செய்து கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

செய்திகள்

பொலிஸ் நிலைய சி.சி.டி.விகளை காணவில்லையென பொலிஸார் முறைப்பாடு

  • Jan 6, 2025 - 04:40 PM
  • 0 Comments

கொழும்பு கோட்டை பழைய பொலிஸ் தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த 07 சி.சி.டி.வி கெமராக்கள் காணாமல் போயுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் தலைமையகம், கோட்டை பொலிஸில் முறைப்பாடும் செய்துள்ளது. தற்போது, பொலிஸ் தலைமையகம் கொம்பனி வீதியில் உள்ள பழைய விமானப்படை தளத்தில் நிறுவப்பட்டுள்ளது. பொலிஸ் தலைமையகத்தை அந்த இடத்திற்கு கொண்டு சென்றதன் பின்னர் இந்த சிசிடிவி கெமராக்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் பழைய பொலிஸ் தலைமையகத்தின் 5வது மாடியில் இந்த சிசிடிவி கெமராக்கள் பொருத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது  

செய்திகள்

கிளீன் சிறிலங்காவில் முதலில் தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்ய வேண்டும் -யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்

  • Jan 6, 2025 - 04:14 PM
  • 0 Comments

கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் அரசு முதலில் தன் மீது பதிந்துள்ள தமிழினப் படுகொலைக் கறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக விசாரணையின் பேரில் சிறிலங்காவின் சிறைகளில் வாடும் தமிழ் அரசியற் கைதிகளை விடுதலை செய்யக் கோரி வடக்கு – கிழக்குத் தழுவி முன்னெடுக்கப்படும் கையெழுத்துப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இன்று (06) யாழ் பல்கலைக்கழக முன்றலில் […]

செய்திகள்

இப்படத்தில் உள்ள சிறுமியை காணவில்லை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள்

  • Jan 6, 2025 - 03:58 PM
  • 0 Comments

பதுளையில் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ள சிறுமி ஒருவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களிடம் உதவிகோரியுள்ளனர். பதுளை , எட்டம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 03 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக எட்டம்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு கிடைத்துள்ளது இதனையடுத்து விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காணாமல் போயுள்ள சிறுமியின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். காணாமல் போயுள்ள சிறுமியின் விபரங்கள் ; பெயர் ; இரத்நாயக்க முதியன்சேலாகே கவிசா தெவ்மணி வயது ; 16 வயது […]

செய்திகள்

அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் சிங்களவர் நியமனம்

  • Jan 6, 2025 - 03:48 PM
  • 0 Comments

ஜனாதிபதியால் அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் இன்று (06) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் வழங்கி வைக்கப்பட்டன.  

செய்திகள்

காணி சீர்திருத்த ஆணைக்குழுவால் 2015 முதல் வழங்கப்பட்ட காணிகள் தொடர்பில் விசாரணை

  • Jan 6, 2025 - 03:02 PM
  • 0 Comments

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பல்வேறு தேவைகளுக்காக வழங்கப்பட்ட காணி தொடர்பில் விசேட விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார். விசாரணையின் பின்னர் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ‘எல்ஆர்சி மூலம் தொழிற்சாலைகள் மற்றும் விவசாயத்திற்காக நிலங்கள் விடுவிக்கப்படுகின்றன. ஆனால் சமீப காலமாக பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகள் மற்றும் ஒதுக்கப்பட்ட காணிகள் தொடர்பில் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் காணி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp