செய்திகள்

யாழ்ப்பாண சாரதிக்கு பரந்தனில் மயக்கமருந்து கொடுத்து தங்க நகைகள் கொள்ளை

  • Jan 20, 2025 - 03:16 PM
  • 0 Comments

வாகன சாரதிக்கு மயக்க மருந்து கொடுத்து, சாரதியின் 05 பவுண் நகைகளை இருவர் கொள்ளையடித்துச் சென்ற சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. யாழ். நகர் பகுதியில் வாடகை முறையில் இயங்கும் கன்ரர் ரக வாகனத்தின் சாரதி ஒருவரது நகைகளே நேற்று (19) கொள்ளையடிக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது: வாகன வாடகை தரிப்பிடத்துக்கு சென்ற இருவர், கிளிநொச்சி பகுதியிலிருந்து பொருட்களை ஏற்றிவர வேண்டுமெனக் கூறி, வாகனத்தை வாடகைக்கு அமர்த்தி, அவ்வாகனத்தில் இருவரும் கிளிநொச்சி நோக்கி பயணித்துள்ளனர். பரந்தன் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது வீதியோரமாக […]

முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் பிரதான குளங்களின் வான் கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன

  • Jan 20, 2025 - 03:06 PM
  • 0 Comments

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான குளங்களின் ஒன்றான நவகிரி குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளின் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன. மண்டூர் – வெல்லாவெளி பிரதான போக்குவரத்துப்பாதையின் ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளன. போரதீவுப்பற்று பிரதேச செயலகப்பிரிவில் உள்ள அலுவலகங்களுக்கு கடமைக்கு செல்லும் அரச ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்துச்செய்வது பாதிக்கப்பட்ட நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் ஊடாக உழவு இயந்திரங்கள் மூலம் போக்குவரத்துச்சேவை முன்னெடுக்கப்பட்டது. போரதீவுப்பற்று பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் […]

செய்திகள்

தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

  • Jan 20, 2025 - 02:50 PM
  • 0 Comments

தொடரூந்து சாரதிகளின் முதலாம் மற்றும் இரண்டாம் தர பதவி உயர்வு பரீட்சை காரணமாக மூன்று நாட்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று (20) முதல் வழமை போன்று இயங்கும் என தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் சாரதிகள் பரீட்சைக்கு தயார்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த 17ஆம் திகதி முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) வரை பல தொடரூந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டன. எவ்வாறாயினும், நேற்றைய தினம் பிற்பகல் ரயில் சேவைகள் இரத்து செய்யப்படவில்லை என தொடரூந்து திணைக்களம் மேலும் […]

முக்கிய செய்திகள்

மன்னாரில் யுவதி ஒருவரின் சடலம் மீட்பு

  • Jan 20, 2025 - 02:43 PM
  • 0 Comments

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டக்காடு தொடரூந்து கடவைக்கருகில் இளம் பெண் ஒருவரின் சடலம் இன்று (20) மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னாரிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்தில் குறித்த பெண் மோதி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த பெண் மன்னார் ஜீவபுரம் பகுதியில் வசித்து வந்துள்ள நிலையில் வெள்ளம் காரணமாக தற்காலிகமாக தோட்டக்காடு பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. குறித்த மரணம் தொடர்பாக மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகம்

ஹமாஸ் அமைப்பினரால் விடுவிக்கப்பட்ட 3 பிணைக்கைதிகளும் இஸ்ரேல் திரும்பினர்

  • Jan 20, 2025 - 06:53 AM
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதங்களுக்கு பின் முடிவுக்கு வந்துள்ளது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தத்தால் இருதரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்று அமலுக்கு வந்தது. இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் 6 வாரங்களுக்கு (42 நாட்கள்) நடைமுறையில் இருக்கும். கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக் கைதிகளாக பிடித்துச்சென்றனர். பின்னர் தற்காலிகமாக போர் நிறுத்தத்தின்போது […]

இந்தியா முக்கிய செய்திகள்

ஆமைக்கறி சீமானின் அப்பாடக்கர் வெளிவந்தது போட்டுடைதார்- இயக்குநர் சங்ககிரி

  • Jan 20, 2025 - 06:43 AM
  • 0 Comments

பிரபாகரனுடன் சீமான் இருக்கும் போட்டோவை எடிட் செய்ததே நான்தான் என இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது அந்த புகைப்படத்தை கவனித்தீர்கள் என்றால் சீமானுக்கு நிழல் வைத்திருப்பேன் என தெரிவித்த அவர் என்னால் முடிந்த அளவுக்கு அப்புகைப்படத்தை சிறப்பாக எடிட் செய்து கொடுத்ததாக மேலும் தெரிவித்துள்ளார் பெரிதும் பாராட்டப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் அடுத்ததாக ‘பயாஸ்கோப்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், விடுதலை […]

முக்கிய செய்திகள்

வடகிழக்கில் இன்றும் (20-01-2025) மழைக்கான சாத்தியம்

  • Jan 20, 2025 - 06:30 AM
  • 0 Comments

வடக்கு, கிழக்கு வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் மழையுடனான வானிலை மேலும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை, மாத்தளை மற்றும் […]

செய்திகள்

பனை தொழில் மேம்பாடு தொடர்பில் அமைச்சர் சுந்தரலிங்கம் ஆராய்ந்தார்

  • Jan 20, 2025 - 06:19 AM
  • 0 Comments

நேற்று ;(19.01.2025), பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் யாழ் மாவட்டத்திலுள்ள பனை சார் தொழில் துறையோடு சம்மந்தப்பட்ட இயந்திரங்களை உருவாக்கும் சிவ கெங்கா இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு நேரடியாக சென்று பார்வையிட்டார். இதில் பனை அபிவிருத்தி சபை தலைவர் சகாதேவனும் கலந்து கொண்டார். இவ்விஜயத்தில் போது, அமைச்சர் நிறுவனத்தின் தலைவருடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் தனது அமைச்சின் கீழ் இவ்வாறான இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப்படவிருக்கும் திட்டங்கள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக […]

செய்திகள்

கொழும்பு மொரட்டுவவில் பொலிஸார் மீது தாக்குதல் பொலிஸ் நிலையத்தில் பதற்றம்

  • Jan 20, 2025 - 06:02 AM
  • 0 Comments

100க்கும் மேற்பட்டோர் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால்கூடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் அங்கு ஒரு பதற்றமான சூழல் காணப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் உள்ள சிலரை கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அப் பிரதேச மக்கள் மொரட்டுவை காவல் நிலையத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது மொரட்டுவை பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தின் முன் மின்பந்தல் கட்டப்பட்டு வருவதாவும், இதனால் அங்கிருந்த ஒரு குழு வீதியை மறித்து செயற்பட்டு வந்ததாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக, அவர்களை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp