செய்திகள்

குற்றச் செயல்களுடன் தொடர்புடைய மற்றொரு பொலிஸ் உத்தியோகஸத்தர் கைது

  • Jan 22, 2025 - 02:16 PM
  • 0 Comments

கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார். கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் பணம் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த கடத்தல்காரர்கள் வெலிக்கடைப் பகுதியில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் […]

முக்கிய செய்திகள்

மத்திய வங்கி கொள்ளையரான அர்ஜூன மகேந்திரனை இலங்கைக்கு கொண்டு வர முடியாதென கையை விரித்தார் ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 01:28 PM
  • 0 Comments

மத்திய வங்கி திறைசேரி பிணை முறி மோசடி குறித்த விசாரணைகள் பற்றி கருத்து தெரிவித்துள்ள ஜனாதிபதி அர்ஜூன மகேந்திரன் சிங்கப்பூர் பிரஜை என்பதால் அவரை இலங்கைக்கு கொண்டுவருவது கடினமாக உள்ளது என தெரிவித்துள்ளார். மத்திய வங்கி கொள்ளையர்களில் ஒருவரான அர்ஜூன மகேந்திரன் சிங்கபூரில் சுகபோகமாக வாழ்ந்து வருகின்றார் அவரை இலங்கைக்கு கொண்டு வரமுடியாத நிலையில் அரசாங்கம் இருப்பதாக ஜனாதிபதி கையை விரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது எனினும் இந்த விவகாரத்தின் பாரதூரதன்மையை சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு தெளிவுபடுத்த முயற்சிக்கவுள்ளதாக அவர் மேலும் […]

செய்திகள்

வடக்கில் இலஞ்சம் மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட 28 பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

  • Jan 22, 2025 - 01:16 PM
  • 0 Comments

வடமாகாணத்தில் கடமையாற்றி வந்த 28 பொலிஸார் லஞ்சம் பெற்றமை மற்றும் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச் செயல்களுக்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குடந்த வருடம் மட்டும் வடக்கில் 34 படுகொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் 28 பொலிஸார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இலஞ்சம் பெற்றமை, மோசடிகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையிலேயே […]

உலகம்

உக்ரைன் விவகாரம் தொடர்பில் புட்டினை சந்திக்க தயார் – டிரம்ப்

  • Jan 22, 2025 - 10:06 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ரஸ்சிய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும் உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஸ்சியா வரவில்லை என்றால் ரஸ்சியா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ‘உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஸ்சியா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது. எனக்கு புதினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. புதினை சந்திப்பது குறித்து கேள்விக்கு […]

இந்தியா

சீமானின் வீட்டிற்கு பொலிஸார் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்

  • Jan 22, 2025 - 09:56 AM
  • 0 Comments

சீமான் வீடு முற்றுகையிடப்படும் என்று தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருஸ்ணன் தெரிவித்து இருந்தார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியார் குறித்து பேசியது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது. இது தொடர்பாக காவல் நிலையங்களில் சீமான் மீது 60-க்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (22-01-2025 ) சீமான் வீடு முற்றுகையிடப்படும் என மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்து இருந்தார். பெரியாரிய உணர்வாளர்கள் […]

செய்திகள்

பொலிஸ் ஆணைக்குழுவின் நடவடிக்கை திருப்தியளிக்கவில்லை-ஜனாதிபதி

  • Jan 22, 2025 - 09:28 AM
  • 0 Comments

பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது. ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது. பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார் ;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்? அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் […]

செய்திகள்

நாடாளுமன்றத்தில் உரையாற்ற சந்தர்ப்பம் தரப்படவில்லை. அர்ச்சுனா எம்பி குற்றச்சாட்டு

  • Jan 22, 2025 - 07:56 AM
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை ஆராய்வதற்கு யாரும் நியமிக்கப்படவில்லையென யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார் இன்று சபை அமர்வில் கலந்து கொண்டிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சபையில் ஒழுங்கு பிரச்சனை ஒன்றை முன்வைத்து கருத்து வெளியிட்டிருந்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் உரையாற்றுவதற்கு எனக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. கடந்த 8ஆம் திகதி எழுத்து மூலமாக முறைப்பாடு செய்துள்ளேன். ஆனாலும் இன்று வரை எனக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறு நீங்கள் […]

முக்கிய செய்திகள்

மேல் தட்டில் உள்ள பொருளாதாரத்தை கீழ் மட்டத்திலிருக்கும் மக்களுக்கு நகர்த்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

  • Jan 22, 2025 - 07:41 AM
  • 0 Comments

நாட்டின் அனைத்துப் பிரிவினரையும் பொருளாதாரச் செயல்பாட்டில் ஈடுபடுத்தும் நோக்கில் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பது தொடர்பாக நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற முதற்கட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். செயற்திறனுடனும் திறமையாகவும் பொருளாதார செயல்முறையை கையாள்கையில் பொதுவான புழக்க முறையொன்றினை நிறுவுவதன் முக்கியத்துவம் […]

செய்திகள்

வடகிழக்கு, உட்பட நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை தொடரும்- வானிலை அதிகாரி

  • Jan 22, 2025 - 06:51 AM
  • 0 Comments

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி மழை பெய்யக்கூடுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் எதிர்வுகூறியுள்ளார் இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிரதேசங்களின் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp