கோட்டா அரசுக்கு நடந்ததே அநுர அரசுக்கு நடக்குமென விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது
நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் அநுராதபுரத்தில் […]









