முக்கிய செய்திகள்

கோட்டா அரசுக்கு நடந்ததே அநுர அரசுக்கு நடக்குமென விவசாய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது

  • Jan 29, 2025 - 06:23 AM
  • 0 Comments

நெல்லுக்கான உத்தரவாத விலை நிர்ணயிப்பதை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக விவசாயத்துறை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்த கருத்தினை வன்மையாக கண்டிக்கின்றோம். தேர்தல் காலத்தில் குறிப்பிட்டதை போன்று நெல்லுக்கான உத்தரவாத விலையை சாதகமான முறையில் நிர்ணயிக்க வேண்டும். முறையற்ற வகையில் செயற்பட்டால் அரசாங்கத்துக்கு எதிராக விவசாயிகள் தான் முதலில் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். கோட்டபய ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட கதியை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என விவசாய ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் அனுராத தென்னகோன் தெரிவித்தார். அநுராதபுரம் அநுராதபுரத்தில் […]

உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இயற்கை எய்தினார்!

  • Jan 29, 2025 - 06:03 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா 28.01.2025 காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT SCAN பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினறுமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் […]

முக்கிய செய்திகள்

தமிழர்களின் இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பில் ஓரிரு வார்த்தைகளிலேயே அநுர அரசு பதிலளிப்பதாக பிரிட்டன் கவலை வெளியிட்டுள்ளது

  • Jan 29, 2025 - 06:01 AM
  • 0 Comments

பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் புதிய அரசாங்கத்தரப்பிலிருந்து எந்தவொரு முன்னேற்றம் இல்லையென பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட், தமிழ்ப்பிரதிநிதிகளிடம் விசனம் வெளியிட்டுள்ளார் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27) இலங்கையை வந்தடைந்த பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட் நேற்று (28-01-2025) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்தார் இதன்போது கத்தரின் வெஸ்ட்டுக்கும் தமிழ்த்தேசிய கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு […]

முக்கிய செய்திகள்

யாழ் பல்கலைகழக விரிவுரிரையாளர்களை பணிக்கு திரும்புமாறு அரசாங்கம் கோரிக்கை

  • Jan 29, 2025 - 05:37 AM
  • 0 Comments

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் எழுந்துள்ள முரண்பாடுகள் தொடர்பில் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அது கிடைத்த பின் கல்வி அமைச்சு விரைவில் இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வினைகளை முடிவுக்கு கொண்டவரும் எனவும் ஆகவே அதுவரை வேலை நிறுத்தங்களில் ஈடுபடாது கல்வி செயற்பாடுகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல ஒத்துழைக்குமாறு அரசாங்கம் கோரியுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை (28) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்திகள்

திட்டமிடப்பட்ட தடைகளாலேயே மலையகத்தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா வின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி; விசனம் தெரிவித்துள்ளார்

  • Jan 28, 2025 - 09:29 PM
  • 0 Comments

இலங்கையின் மலையகத் தமிழ்ச்சமூகம் கட்டமைக்கப்பட்ட பல்வேறு தடைகளுக்குத் தொடர்ச்சியாக முகங்கொடுத்து வருகின்றார்கள். அதுவே அவர்களின் முன்னேற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ் விசனம் வெளியிட்டுள்ளார். சட்டம் மற்றும் சமூக நிதியம் மற்றும் இளம் ஆய்வாளர் வலையமைப்பு ஆகியவற்றின் கூட்டிணைந்த ஏற்பாட்டில் நேற்று திங்கட்கிழமை (27) கொட்டகலை, ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரியில் ‘மலையக மக்களின் கல்வி மற்றும் உரிமைகளுக்கான அணுகல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற மலையக ஆசிரியர்களின் ஆய்வு […]

முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு அடங்கலாக 7 மாவட்டங்களில் காற்றின் தரம் பாதிப்பு

  • Jan 28, 2025 - 09:13 PM
  • 0 Comments

இலங்கையில் காற்றின் தரக் குறியீடு இன்று முழுவதும் 58 முதல் 120 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கொழும்பு, காலி, திருகோணமலை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் ஆகிய இடங்களில் காற்றின் தரக் குறியீடு சற்று ஆரோக்கியமற்ற நிலை வரை அதிகரிக்கக்கூடும் எனவும் அதே நேரத்தில் பிற பகுதிகளில் மிதமான மட்டத்தில் இருக்கும் எனவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்திகள்

நாமலுக்கு எதிராக மைத்திரி அரசு தாக்கல் செய்த அதே குற்றப்பத்திரிக்கையை அநுர அரசும் தாக்கல் செய்துள்ளது

  • Jan 28, 2025 - 08:47 PM
  • 0 Comments

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளார். இந்திய கிரிஸ்ரியல் எஸ்டேட் நிறுவனத்தால் ரக்பி அபிவிருத்திக்காக வழங்கப்பட்ட 70 மில்லியன் ரூபாவை முறைகேடாகப் பயன்படுத்தியதாக் இந்த குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது . இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு இதற்கு முன்னர் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை தாக்கல் செய்திருந்த நிலையில் நாமல் ராஜபக்ஸ இந்த வழக்கில் ஒரு சந்தேக நபராகக் கைது […]

முக்கிய செய்திகள்

மாவை சேனாதிராஜாவுக்காக பிரார்த்தனை செய்யும் – நாமல் ராஜபக்ஸ

  • Jan 28, 2025 - 08:37 PM
  • 0 Comments

தமிழரசுக் கட்சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து மிகுந்த கவலையடைந்துள்ளதாக நாமல் தெரிவித்துள்ளார். மாவை விரைவாகவும் முழுமையாகவும் குணமடைய மனதார பிராத்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தனது டுவீட்டரில் பதிவிட்டுள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் […]

செய்திகள்

விடைக்கான கணக்கை போடும் கஜேந்திரக்குமார், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டமே சிறப்பானது

  • Jan 28, 2025 - 08:25 PM
  • 0 Comments

தமிழ் தேசிய கட்சிகளுக்கிடையே கொள்கை ரீதியான இணக்கப்பாடு இல்லாமல் ஒன்றிணைவது சாத்தியமில்லையென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இன்று (28) ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், வரவுள்ள அரசியலமைப்பு ஒற்றையாட்சி முறைமையாக அமையவுள்ளது நாடாளுமன்றில் அநுர தரப்பு அதீத பெரும்பான்மையுடன் உள்ளது. அவர்களுக்கு எமது தரப்பின் ஆதரவு தேவையில்லை. அந்த நிலையில் தமிழர் தரப்பில் நாடாளுமன்றில் […]

முக்கிய செய்திகள்

இந்திய மீனவர்களின் ஆக்ரோஷமான செயற்பாடுகளாலேயே துப்பாக்கி இயங்கியது – கடற்படை விளக்கம்

  • Jan 28, 2025 - 07:39 PM
  • 0 Comments

இந்திய மீனவர்கள் கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தியதாலேயே துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாக கடற்படை விளக்கமளித்துள்ளது இந்திய மீனவர்களை கைது செய்வதற்கு கடற்படையினர் நடவடிக்கை எடுத்த போது, கடற்படை வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் இரு மீனவர்கள் காயமடைந்துள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இது குறித்து கடற்படை ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : நேற்று (27ஸ்ரீ01-2025) யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பிரதேசத்துக்கு அப்பால் இலங்கைக்கு உரித்தான கடல் எல்லைக்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தனர் எனவே இந்திய மீன்பிடிப்படகுகளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp