தமிழர்களுக்கு நீதி வேண்டுமென பிரான்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கை வெளியீடு
பிரான்சின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்டுள்ள கூட்டு செய்திக்குறிப்பில், யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகள், சர்வதேச நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவும், அதற்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டுவரவும் முக்கிய வாய்ப்பை அளிக்கின்றன என வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற யுத்த குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக சுயாதீன சர்வதேச விசாரணை அவசியம் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இக்கருத்தை எல்எவ்ஐ மற்றும் என்எவ்பி கட்சி உறுப்பினர்கள் இணைந்து வெளியிட்டுள்ளனர் தமிழர்களுக்கு நீதி, […]









