முல்லைத்தீவு இளைஞரின் மரணத்திற்கு நீதி விசாரணை மேற்கொள்ளப்படும் என்கிறார் ஜெகதீஸ்வரன் எம்.பி
முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமிற்குள் சென்ற இளைஞர்கள் தாக்கப்பட்டதும், ஒருவரின் மரணம் ஏற்பட்டதும்சம்பந்தமாக நீதியான விசாரணை மேற்கொள்ளப்படும் என தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம. ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமுக்குள் சென்ற ஏழு இளைஞர்கள் இராணுவத்தினரால் விரட்டப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியதாகவும், தப்பியோடியவர்களில் ஒருவர் குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்களுடன் தொலைபேசி வாயிலாக உரையாடி, அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்ததாக ஜெகதீஸ்வரன் கூறினார். இதுகுறித்து வடக்கு […]









