தமிழரசின் கதவடைப்பு அழைப்பிற்கு திருக்கோவில் பிரதேச சபை சுயேட்சை குழு ஆதரவு
எதிர்வரும் திங்கட்கிழமை (18-08) இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியினால் வடகிழக்கில் அறிவிக்கப்பட்டுள்ள ஹர்த்தாலுக்கு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் சு. சசிக்குமார் தலைமையிலான சுயேட்சை குழு முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. இத்துடன், திருக்கோவில் பிரதேச மக்களும் வர்த்தகர்களும் இந்த ஹர்த்தாலுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இந்த தொடர்பில் அவர் தெரிவித்ததாவது: வடகிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்தையும், முல்லைத்தீவில் உயிரிழந்த இளைஞனுக்கு நீதி கோருவதையும், செம்மணி போன்ற இனப்படுகொலை சம்பவங்களுக்கு நீதி […]








