உள்ளூர் செய்திகள்

சுமந்தரனும் சாணக்கியனும் இல்லையெனில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) வெற்றியடைந்திராது- சுமந்திரன்

  • Aug 19, 2025 - 11:06 AM
  • 0 Comments

தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டத்தின் நாயகர்கள் நாமே என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ‘சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பலருக்கு ஞாபக மறதி இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக உண்மையை மறந்து குற்றஞ்சாட்டலாம். ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நாங்களே முன்னெடுத்துள்ளோம். வடக்கில் இராணுவ […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • Aug 19, 2025 - 10:44 AM
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]

உள்ளூர் செய்திகள்

நல்லூரானின் பெருந்திருவிழா நாளை மறுதினம் தேர்

  • Aug 19, 2025 - 10:36 AM
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா இன்றாகும். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

300 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் கைது

  • Aug 19, 2025 - 09:45 AM
  • 0 Comments

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (18-08) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில், கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் இடம்பெற்றது. சம்பவத்துக்கு முன்னர், ஒரு பெண் தனது வழக்கு தொடர்பாக நீதிபதியின் அலுவலகத்திற்கு சென்றபோது இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கடந்த மாதம் இலஞ்சம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறை நிந்தவூர்ல நாலரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Aug 19, 2025 - 08:51 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (18-08) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிடிபட்டார். சந்தேக நபரிடம் இருந்து 4 கிலோ 320 கிராம் கஞ்சா மற்றும் 6 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வீரமுனையில் அந்த பகுதியின் பெயர் பெயர்ப்பலகையை நிறுவ தடைவிதித்த உறுப்பினர்கள். பொலிஸார் உடந்தை

  • Aug 19, 2025 - 08:37 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை பகுதியில், அந்த பகுதியின் பெயரைக் குறிக்கும் பெயர்ப்பலகையை நிறுவுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டபோது, சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் சிலர் அதனை தடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை – கல்முனை பிரதான வீதியில், வீரமுனை ஆண்டியர் சந்தியில் பெயர்ப்பலகையை நிறுவும் பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை நேற்று மேற்கொண்டது. ஆனால், அங்கு வந்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள் இந்த செயற்பாட்டை இடைமறித்தனர். இதுகுறித்து பொலிஸாருக்கும் தகவல் அளிக்கப்பட்டபோதும், சம்பவ இடத்துக்கு வந்த சம்மாந்துறை பொலிஸார் பிரதேசசபை உறுப்பினர்களுக்கு […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

நிதி மோசடியில் குற்றவாளியொருவர் அநுர அரசில் அமைச்சராய் இருப்பது பாரிய பிரச்சினை- புபுது ஜயகொட

  • Aug 19, 2025 - 08:24 AM
  • 0 Comments

நிதி மோசடியில் குற்றவாளியாக்கப்பட்ட ஒருவரை நாட்டின் பிரதான அமைச்சரவை அமைச்சராக நியமித்திருப்பது பாரிய பிரச்சினை என முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார். கொழும்பில் நேற்று (18-08) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை எதிர்த்து, அவர் உர கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய காலத்தில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டினார். 80 இலட்சம் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சாணக்கியனின் சாணக்கியம் மட்டக்களப்பு வெறிச்சோடியது

  • Aug 18, 2025 - 01:42 PM
  • 0 Comments

வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவ நடமாட்டம் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளைக் கண்டித்து, இலங்கை தமிழரசு கட்சியால் நிர்வாக முடக்கல் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் மட்டக்களப்பு மாநகரம் இன்று வெறிச்சோடியது

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

குழந்தைப் பெற்றெடுக்கும் ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகம்

  • Aug 18, 2025 - 01:26 PM
  • 0 Comments

குழந்தைப் பெற்றெடுக்கும் ரோபோக்களின் மாதிரி அடுத்த ஆண்டு அறிமுகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன விஞ்ஞானிகள், மனித கருவை சுமந்து குழந்தை பெற்றெடுக்கக்கூடிய ரோபோக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ‘ரோபோட்டிக்’ தொழில்நுட்பத்தில் வேகமாக முன்னேறி வரும் சீனா, அண்மையில் ரோபோக்களுக்கென பிரத்யேக வணிக வளாகமொன்றையும் தொடங்கியுள்ளது. இதனையடுத்து, சீனாவின் குவாங்சோவைச் சேர்ந்த கைவா டெக்னாலஜி நிறுவனம், குழந்தையை சுமந்து பெறக்கூடிய ரோபோவை உருவாக்கும் ஆய்வை முன்னெடுத்து வருகிறது. இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கி வருபவர், சிங்கப்பூரின் நன்யாங் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வவுனியாவில் ஹர்த்தால் வெற்றியா, தோல்வியா? உண்மை என்ன?

  • Aug 18, 2025 - 12:29 PM
  • 0 Comments

வடக்கு – கிழக்கு தழுவிய ஹர்த்தாலில், வவுனியாவில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரும்பாலும் பாதிக்கப்படாமல் இருந்தது. சில செயல்பாடுகள் மட்டுமே ஸ்தம்பிதமடைந்தன. வடக்கு – கிழக்கில் அதிகரித்திருக்கும் இராணுவப் பிரசன்னத்திற்கும் முல்லைத்தீவு முத்தையன்கட்டில் இடம்பெற்ற சம்பவத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இன்று ஹர்த்தால் ஒன்றை முன்னெடுக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் அழைப்பு விடுத்திருந்தார். எனினும், வவுனியாவில் இன்று காலை முதல் பொதுமக்கள் வழமைபோலவே தங்கள் அன்றாடச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர். நகரின் பெரும்பாலான […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp