உள்ளூர் செய்திகள்

தாய்லாந்தில் 10,000 இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு

  • Aug 20, 2025 - 08:31 AM
  • 0 Comments

தாய்லாந்து அமைச்சரவை, 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட எல்லை மோதலால் கம்போடிய தொழிலாளர்கள் திரும்பிச் சென்ற நிலையில் ஏற்பட்ட தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் தரவுகளின்படி, வயதான மக்கள் தொகையும் குறைந்து வரும் உள்ளூர் பணியாளர்களின் எண்ணிக்கையும் காரணமாக தாய்லாந்து, விவசாயம், கட்டுமானம் மற்றும் உற்பத்தித் துறைகளில் குறைந்தது 30 இலட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களை நம்பி […]

உள்ளூர் செய்திகள்

அரசாங்கத்துக்குள் பிரச்சினை இல்லையென கூறுமளவுக்கு பிரச்சினைகள் உள்ளன.

  • Aug 19, 2025 - 05:59 PM
  • 0 Comments

தேசிய மக்கள் சக்தி (NPP) மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) இடையிலான கருத்து முரண்பாடுகள் கடந்த சில மாதங்களாக தீவிரமடைந்துள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் முக்கிய உறுப்பினர்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் ஜே.வி.பியின் பாரம்பரிய தலைவர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் அவருக்கு நெருக்கமான எம்.பிகள் மீது இவர்கள் பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை என தகவல்கள் வெளியாகின்றன. நாடாளுமன்றத்தில் பிரதமர் வெளியிடும் கருத்துகளுக்கு சில […]

உள்ளூர் செய்திகள்

மகிந்தவின் பெறா மகன் சஷீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

  • Aug 19, 2025 - 03:13 PM
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற போராட்டங்களின் போது, செவனகல – கிரிப்பன் வேவ பகுதியில் உள்ள அரசாங்க நிலம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்துக்கான இழப்பீட்டை, மற்றொருவரின் பெயரில் பெற்றதாகக் கூறப்படும் விவகாரத்துடன் தொடர்புடையதாக அவர் கைது செய்யப்பட்டார். இச்சம்பவத்தில், இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் ஆகஸ்ட் 6 […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சின்னக்கதிர்காமம் என போற்றப்படும் மண்டூர் கந்தசுவாமி ஆலயம் நேற்றிரவு கொடியேறியது

  • Aug 19, 2025 - 02:54 PM
  • 0 Comments

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நேற்றிரவு கொடியேற்றத்தால் தொடங்கியது. கிழக்கில் உள்ள மட்டக்களப்பின் வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயம், சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படுகிறது. கதிர்காமக் கந்தன் ஆலயத்தில் இடம்பெறும் பூஜை முறைகளுக்குச் சமமாக, மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவமும் கப்புறாளைகளால் வாய்கட்டப்பட்டு நடைபெறுவது தனித்துவமான சிறப்பாகக் கருதப்படுகிறது. இலங்கையின் வரலாற்றுப் பதிகளில் இடம்பிடித்துள்ள இந்த ஆலயம், கந்தபுராண காலத்திலேயே தோற்றம் பெற்றதாக நம்பப்படுகிறது. புராணக் கதைகளின்படி, முருகப்பெருமானும் சூரபத்மனும் மோதிய போரில், […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

சம்மாந்துறையில் கஞ்சாவுடன் 4 பேர் கைது

  • Aug 19, 2025 - 02:05 PM
  • 0 Comments

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் கஞ்சா விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லரிச்சல் பகுதியில் நேற்றிரவு (18-08) இரவு சம்மாந்துறை ஊழல் தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இக்கைது இடம்பெற்றது. இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், கல்லரிச்சல், தனமல்வில, உடங்கா, புளக் ஜே மேற்கு பகுதிகளைச் சேர்ந்த 45, 63, 40 மற்றும் 22 வயதுடைய நபர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து முறையே மொத்தம் 350 கிராம் கஞ்சா, 250 கிராம் […]

உள்ளூர் செய்திகள்

சுமந்தரனும் சாணக்கியனும் இல்லையெனில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை (P2P) வெற்றியடைந்திராது- சுமந்திரன்

  • Aug 19, 2025 - 11:06 AM
  • 0 Comments

தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) போராட்டத்தின் நாயகர்கள் நாமே என தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், ‘சுமந்திரன் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை’ என்ற குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பலருக்கு ஞாபக மறதி இருக்கலாம் அல்லது தமது அரசியலுக்காக உண்மையை மறந்து குற்றஞ்சாட்டலாம். ஆனால், கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களை நாங்களே முன்னெடுத்துள்ளோம். வடக்கில் இராணுவ […]

உள்ளூர் செய்திகள்

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம்

  • Aug 19, 2025 - 10:44 AM
  • 0 Comments

பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலிகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த ஒருவரே காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் காயம் பேலியகொடை ஞானரத்ன மாவத்தையில் இன்று  துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மேற்கொண்ட இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் […]

உள்ளூர் செய்திகள்

நல்லூரானின் பெருந்திருவிழா நாளை மறுதினம் தேர்

  • Aug 19, 2025 - 10:36 AM
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழா இன்றாகும். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதன்படி தொடர்ந்து 25 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்களுடன் நல்லூர் கந்தனின் உற்சவம் இனிதே நிறைவுறும்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

300 ரூபா இலஞ்சம் பெற்ற கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் கைது

  • Aug 19, 2025 - 09:45 AM
  • 0 Comments

இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியும் அவரது மனைவியும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் நேற்று (18-08) மாலை அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மருதமுனை பகுதியில், கல்முனை காதி நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தில் அமைந்திருந்த அலுவலகத்தில் இடம்பெற்றது. சம்பவத்துக்கு முன்னர், ஒரு பெண் தனது வழக்கு தொடர்பாக நீதிபதியின் அலுவலகத்திற்கு சென்றபோது இலஞ்சம் கோரப்பட்டதாக குற்றஞ்சாட்டி, கடந்த மாதம் இலஞ்சம் மற்றும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

அம்பாறை நிந்தவூர்ல நாலரை கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

  • Aug 19, 2025 - 08:51 AM
  • 0 Comments

அம்பாறை மாவட்டம் நிந்தவூரில் கஞ்சா மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று திங்கட்கிழமை (18-08) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, நிந்தவூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரே போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிடிபட்டார். சந்தேக நபரிடம் இருந்து 4 கிலோ 320 கிராம் கஞ்சா மற்றும் 6 கிராம் 730 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp