இந்தியா செய்திகள் முக்கிய செய்திகள்

த.வெ.க.வின் இரண்டாவது மாநாட்டிற்கு வந்த தொண்டர்களால் மதுரையே அதிர்ந்தது

  • Aug 21, 2025 - 06:40 PM
  • 0 Comments

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தின் (த.வெ.க.) இரண்டாவது மாநாடு இன்று மாலை மதுரை–தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பாரப்பத்தியில் நடைபெற்று வருகிறது. மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்கின்றனர் என எதிர்பார்க்கப்படுவதால்இ கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பிரமாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழகத்தில் இதுவரை எந்தக் கட்சியும் இத்தகைய பரந்த பரப்பளவிலான மைதானத்தில் மாநாடு நடத்தியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மொத்தம் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் அமைந்துள்ள திடலில்இ 250 ஏக்கர் மாநாட்டிற்காக […]

உள்ளூர் செய்திகள்

திருக்கோயில் பிரதேசத்தில் சங்கங்களுக்கிடையிலான பிரச்சனைகள் தீர்க்க கலந்துரையாடல்

  • Aug 21, 2025 - 06:12 PM
  • 0 Comments

இன்று (21.08.2025) திருக்கோயில் பிரதேச சபை தவிசாளர் சுந்தரலிங்கம் சசிக்குமார் தலைமையில், பிரதேச மீனவ சங்கங்கள், விவசாய சங்கங்கள் மற்றும் நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகள் இணைந்து ஆக்கபூர்வமான கலந்துரையாடலில் ஈடுபட்டனர். கூட்டத்தில், விவசாய சங்கங்கள் முன்வைத்த பிரச்சனைகள் மற்றும் மீனவ சங்கங்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக விரிவான விவாதம் இடம்பெற்றது. பல்வேறு பிரச்சனைகளுக்கு எதிர்காலத்தில் நிலையான தீர்வுகளை வழங்குவதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டன. மேலும், பல சங்கங்கள் தங்களது பிரச்சனைகளை நேரடியாக தவிசாளரிடம் முன்வைத்ததையடுத்து, சில விடயங்கள் உடனடியாக […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச விசாரனை தேவையென ரவிகரன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்

  • Aug 21, 2025 - 06:05 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் செம்மணி சிந்துபாத்தி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சுயாதீனமான பன்னாட்டு நீதி விசாரணை அவசியம் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த காலத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையில் குற்றவாளியாக தண்டிக்கப்பட்ட முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, இராணுவம் மேற்கொண்ட கொடூரச் செயற்பாடுகள் குறித்து ஏற்கனவே நீதிமன்றத்தில் சாட்சியமளித்திருப்பதை நினைவுகூர்ந்தார். அவர் வழங்கிய பி2899 என்ற வழக்கு, தற்போதைய செம்மணி புதைகுழி விசாரணைகளுடன் இணைக்கப்பட வேண்டும் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

காரைதீவில் ‘நிருத்தியார்ப்பணம்’ பரதநாட்டிய நிகழ்ச்சி கோலாகலமாக நடைப்பெற்றது

  • Aug 20, 2025 - 02:21 PM
  • 0 Comments

கல்முனை முத்தமிழ் கலைக்கூடம் நடத்திய இந்நிகழ்ச்சி, காரைதீவு விபுலானந்தா கலாசார மண்டபத்தில் கலைக்கூடத் தலைவர் சிவசிறி அடியவன் பிரமின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கைகள் நிறுவன பணிப்பாளர் பேராசிரியர் கலாநிதி பாரதி கென்னடி கலந்து சிறப்பித்தார். மேலும், கௌரவ அதிதிகளாக நிறுவனத்தின் நடனம் அரங்காற்றுகைத் திணைக்கள சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி துரைசிங்கம் உஷாந்தி, மட்டக்களப்பு வலயக் கல்வி பணிமனையின் அழகியல் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் கலாநிதி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று அடையாள இடை நிறுத்தம்.

  • Aug 20, 2025 - 01:50 PM
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் இன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டது. ஒப்புக்கொள்ளப்பட்ட ஆஊயு கொடுப்பனவை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையே இவ்வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கமாக அவர்கள் முன்வைத்துள்ளனர். இந்த வேலைநிறுத்தம் நாடு முழுவதும் உள்ள அரச பல்கலைக்கழகங்களில் ஒருங்கிணைந்தவாறு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தின் போது ஊழியர்கள் ‘நீக்கப்பட்ட 20மூ ஐ உடனடியாக வழங்குக’, ‘அதிகரிக்கப்பட்ட இடர் கடனை உடனடியாக வழங்குக’, ‘மக்களாட்சி அரசாங்கம் பேச்சுவார்த்தையைத் தவிர்க்கிறது’, ‘அதிகரிக்கப்பட்ட வரவு செலவு முன்மொழிவுகளுக்கு பல்கலைக்கழகங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

முத்தையன்கட்டு கபில்ராஜ் மரண சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது

  • Aug 20, 2025 - 11:41 AM
  • 0 Comments

முல்லைத்தீவு முத்தையன்கட்டு இளைஞரின் மரண சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் நேற்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக முன்பு மூன்று இராணுவத்தினர் கைது செய்யப்பட்டிருந்தனர். அதன்பின், மற்றொரு இராணுவ சிப்பாய் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் ஒட்டுசுட்டான் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், குறித்த சந்தேகநபரும் முன்பு விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் […]

உள்ளூர் செய்திகள்

தாயும் மகளும் யானை தாக்குதலில் பரிதாபமாக உயிரிழப்பு

  • Aug 20, 2025 - 11:28 AM
  • 0 Comments

குருணாகல் பகுதியில் பயிர்கள் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்க சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியைச் சேர்ந்த 28 வயதான தக்ஷிலா சுபாஷினி மற்றும் 53 வயதுடைய அவரது தாயார் இனோகா குமாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். யானை தாக்குதலுக்கு பிறகு, தாயும் மகளும் அம்பன்பொல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மகள் அந்தக் கட்டத்தில் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த தாய் மேலதிக […]

உள்ளூர் செய்திகள்

ஆசியரியர் சேவையில் இணைத்துக்கொள்வதில் புதிய விதிகள்

  • Aug 20, 2025 - 10:42 AM
  • 0 Comments

கல்வி அமைச்சகம், தேவையான தரங்களை பூர்த்தி செய்யாத கல்விப் பட்டங்களை வைத்திருக்கும் நபர்கள் இனி ஆசிரியர் சேவையில் இணைக்கப்படமாட்டார்கள் என அறிவித்துள்ளது. இதனை கல்வி மற்றும் உயர்கல்வி பிரதிஅமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன தெரிவித்தார். அவருடைய தகவலின்படி, தனியார் பல்கலைக்கழகங்கள் வழங்கும் கல்விப் பட்டங்களின் தரத்தை மதிப்பிடுவதற்காக ஒரு சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ஆசிரியர் நியமனங்களுக்கு தேசிய தரங்களுக்கு இணங்கும் பட்டங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது

  • Aug 20, 2025 - 08:50 AM
  • 0 Comments

தபால் தொழிற்சங்க ஊழியர்கள் முன்னெடுத்து வரும் பணிப்புறக்கணிப்பு மூன்றாவது நாளாக இன்றும் தொடரும் என தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. அமைச்சருடன் நேரடிக் கலந்துரையாடலை கோரியே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என்று சங்கத் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார். இதற்கிடையில், வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும் அவர் மறுத்துள்ளார். ஆனால், பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா தனது கருத்தில், கைரேகை இயந்திரத்தை […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு குற்றப் புலனாய்வுத் துறை அழைப்பு விடுத்துள்ளது

  • Aug 20, 2025 - 08:40 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  எதிர்வரும் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை குற்றப் புலனாய்வுத் துறைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அரசாங்க நிதி தனியார் வெளிநாட்டு பயணத்திற்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறித்த வெளிநாட்டு பயணம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்தப் பயணத்தில் முன்னாள் ஜனாதிபதியுடன் 10 பேர் இணைந்து சென்றிருந்தனர் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதே விடயம் தொடர்பில் முன்னாள் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp