உள்ளூர் செய்திகள்

அநுர அரசுக்கு எதிராக மெதுவாக கிளர்தெழ ஆரம்பிக்கும் பிக்குகள்.

  • Aug 26, 2025 - 07:33 AM
  • 0 Comments

இலங்கை மற்றும் இந்தியா இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை (ஆழரு) பொதுமக்கள் முன் வெளியிட வேண்டும் என இலங்கை பல்கலைக்கழக பிக்கு பேரவை (IUBF) ஜனாதிபதி செயல்மரப்பிற்கு கடிதம் ஒன்றை நேற்று (25-08) கையளித்துள்ளது. IUBFஒருங்கிணைப்பாளர் மதிரிகிரியே இச்ஸரதம்ம தேரர் ஊடகங்களிடம் தெரிவித்ததாவது: ‘இந்தாண்டு ஏப்ரல் மாதம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கொழும்புக்கு வருகை தந்தபோது, இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கிடையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சில ஊடகங்கள் ஏழு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியதாகவும், சிலர் […]

உள்ளூர் செய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச தலையீடு தேவையில்லையென பிரதி அமைச்சர் முனீர் முலாஃபார் தெரிவிப்பு

  • Aug 26, 2025 - 07:18 AM
  • 0 Comments

செம்மணி புதைகுழி விசாரணைக்கு சர்வதேச தொழில்நுட்ப உதவி தேவைப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் உதவி கோரப்படவில்லை. தேசிய ஒருங்கிணைப்பு துணை அமைச்சர் முனீர் முலாஃபார் தெரிவித்துள்ளார் ‘செம்மணி புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகளை பரிசோதிப்பதற்காக சர்வதேச நிபுணர்களின் தொழில்நுட்ப உதவி தேவைப்படுகிறது. இதற்கான விவாதங்கள் தற்போது நீதியமைச்சு மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு சார்பில் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் முன்னெடுக்கப்படுகின்றன. ஆனால் இதுவரை எந்த ஒரு நாட்டுக்கும் உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்படவில்லை’ எனக் குறிப்பிட்டார். […]

உள்ளூர் செய்திகள்

மட்டு களுவாஞ்சிக்குடியில் ஹஜ் யாத்திரையிலிருந்து திரும்பியவர்கள் புதைக்கப்பட்ட இடத்தை அகழ நீதிமன்றம் அனுமதி

  • Aug 26, 2025 - 07:00 AM
  • 0 Comments

களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றம், குருக்கள்மடத்தில் மனிதப் புதைகுழி உள்ளதாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டி எடுக்க உத்தரவிட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்து கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுதத்தாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கே இப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் சார்பில் யு.ஆ.ஆ. ரவூப், களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜே.பீ.ஏ. ரஞ்சித்குமார் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பவ இடத்தில் […]

உள்ளூர் செய்திகள்

இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் 7 மணித்தியால விசாரணைக்குப்பின் விடுதலை

  • Aug 26, 2025 - 06:46 AM
  • 0 Comments

மட்டக்களப்பில் களுவங்கேணியைச் சேர்ந்த இனிய பாரதியின் சகாவான பாலசுந்தரம் என்பவரை சிஐடி அதிகாரிகள் கைது செய்திருந்தனர். கொழும்பில் இருந்து வந்த சிஐடி குழுவினர், கடந்த 25ஆம் திகதி திங்கட்கிழமை பகல், அவருடைய வீட்டிலேயே கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட பாலசுந்தரம் மீது சுமார் ஏழு மணித்தியாலங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, அதே நாளில் இரவு 9.00 மணியளவில் அவரை விடுவித்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை அவசியத்தை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

  • Aug 25, 2025 - 05:40 PM
  • 0 Comments

செம்மணி மனித புதைகுழிகளைச் சுற்றியுள்ள உண்மைகளை வெளிக்கொணர சர்வதேச விசாரணை அவசியம் என்பதை வலியுறுத்தி வரும் 29ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பாரிய கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இந்த போராட்டம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பங்காளிக் கட்சித் தலைவர்களான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழீழ விடுதலைக் கழகத் தலைவர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் விக்கிரமசிங்கே, நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது: மருத்துவமனை அதிகாரிகள்

  • Aug 25, 2025 - 11:13 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, நாளை ஆகஸ்ட் 26 அன்று கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தோற்றமளிக்க வருகை தர இருக்க இருந்தார். ஆனால், தற்போது உடல் நலக்குறைவின் காரணமாக, அவர் நாளை நீதிமன்றத்தில் தோன்ற முடியாது என்று கொழும்பு தேசிய மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். மருத்துவ மையத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், விக்கிரமசிங்க மூன்று நாட்களுக்கு முறைப்படி மருந்து உட்கொள்ளவும்; ஓய்வும் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளார். முன்னர், அவர் தண்ணீர் குறைவால் […]

உள்ளூர் செய்திகள்

நிலக்கரி டெண்டரில் முறைகேடுகள் நடந்துள்ளதாக புபுது ஜயகொடா குற்றச்சாட்டு

  • Aug 25, 2025 - 09:38 AM
  • 0 Comments

லங்கா கோல் நிறுவனத் தலைவரின் ராஜினாமா, நிலக்கரி டெண்டர் முறைகேடுகளுக்கு எதிரான எதிர்ப்பின் காரணமாக ஏற்பட்டதாக கூறப்படும் ஊகங்களுக்கு அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னணி சோசலிசக் கட்சியின் (குளுP) கல்வி செயலாளர் புபுது ஜயகொடா கோரிக்கை விடுத்துள்ளார். நுகேகொடாவில் கடந்த வெள்ளிக்கிழமை (22-08) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் அவர் பேசியபோது, டெண்டர் வழங்கும் செயல்முறையில் கடுமையான முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டினார். தேசிய கொள்முதல் வழிகாட்டுதலின்படி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஆறு வாரங்கள் வழங்கப்பட வேண்டும். ஆனால் […]

உள்ளூர் செய்திகள்

ரணிலுக்கு ஆதரவளிப்பதா இல்லையா என ஆராய சஜித் தலைமையில் கட்சி கூடுகின்றது

  • Aug 25, 2025 - 09:25 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு மேலதிக ஆதரவு வழங்குவது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று கூட்டம் நடத்தவுள்ளது. தற்போது அவர் விளக்கமறியலில் உள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இணைந்து கைது நடவடிக்கையை கண்டித்து வருகின்றன. நேற்று (24) கொழும்பில் பல கட்சிகள் ஒன்று கூடி, விக்கிரமசிங்க கைது ‘ஜனநாயக விரோத செயல்’ மற்றும் ‘அரசியல் பழிவாங்கல்’ என்று விமர்சித்தன. எனினும், சஜித் பிரேமதாசா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரா அந்த ஊடகச் சந்திப்பில் […]

உள்ளூர் செய்திகள்

அநுர அரசின் அசமந்த போக்கினால் அரச மருத்துவர்கள் பணிப்புறக்கணிப்பு

  • Aug 25, 2025 - 09:04 AM
  • 0 Comments

மருத்துவர்களின் இடமாற்றத்தில் நிலவும் முறைகேடுகள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படக்கூடிய அபாய நிலை காரணமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று காலை 8.00 மணி முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதேவேளை, அவசர சிகிச்சை பிரிவுகள், மகப்பேறு வைத்தியசாலைகள், சிறுவர் வைத்தியசாலைகள், மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை, சிறுநீரக நோய் பிரிவுகள், இராணுவ வைத்தியசாலை, தேசிய மனநல வைத்திய நிறுவனம் போன்ற முக்கிய பிரிவுகளின் சேவைகள் இடையூறு இன்றிப் செயற்;படும் என சங்கம் அறிவித்துள்ளது. அரச மருத்துவ […]

உள்ளூர் செய்திகள்

ரணில் கைது நீதிமன்ற உத்தரவை சவாலுக்கு உட்படுத்துவது நீதிமன்ற அவமதிப்பாகும் – ஜேவிபி

  • Aug 25, 2025 - 08:55 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இன்று கைகோர்த்துள்ள எதிர்க்கட்சிகள் தான் கடந்த காலங்களில் ‘ரணிலை சிறைக்கு அனுப்பினால் தான் உறக்கம் வரும்’ என்று கூறியவர்கள் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் தில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ரணில் விக்கிரமசிங்க குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அங்கு இருதரப்பினரின் வாதங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால் பிணையளிக்க போதுமான காரணிகள் இல்லாததால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp