உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மூன்று ஆண்டுகளில் வட மாகாணத்தில்; 40 ஆயிரம் ஏக்கரில் புதிதாக தேங்காய் பயிரிடப்படும்

  • Aug 27, 2025 - 07:01 AM
  • 0 Comments

அரசாங்கம், 2030ஆம் ஆண்டுக்குள் 4,200 மில்லியன் தேங்காய்களை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளதாக விவசாய தொழில் அமைச்சு அறிவித்துள்ளது. இதனை அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். 2030க்குள் உலகளாவிய தேங்காய் சந்தையின் பெறுமதி சுமார் 19 பில்லியன் அமெரிக்க டொலர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், போட்டியில் நிலைத்திருக்க இலங்கை தனது தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என அவர் கூறினார். நேற்று (26-08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, இந்த […]

உள்ளூர் செய்திகள்

எதிர்க்கட்சியினரின் AKD கோ கோம் போராட்டம் நேற்று ஆரம்பம்

  • Aug 27, 2025 - 06:50 AM
  • 0 Comments

கொழும்பில் எதிர்க்கட்சி நடத்திய போராட்டத்தில் ஒருவர் பொலிஸ் அதிகாரி காயமடைந்தார். கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகம் அருகே நேற்று (26-08) பிற்பகல் பெரிய மக்கள் கூட்டம் திரண்டது. இதனால் அப்பகுதியில் பல சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ‘ஒடுக்குமுறைக்கு எதிராக’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போராட்டத்தில் பல அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நீதிமன்ற விசாரணைக்கு முன்பாக சிறையில் வைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், அரசின் நடவடிக்கைகளுக்கு அதிருப்தி […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ஈழவிடுதலை போராட்டத்தில் முதல் சயனைட் நஞ்சருந்திய தியாகி பொன் சிவகுமாரனின் 75வது பிறந்தநாள் நினைவுகூரப்பட்டது.

  • Aug 27, 2025 - 06:38 AM
  • 0 Comments

தியாகி பொன் சிவகுமாரின் 75வது பிறந்தநாள் நினைவு தினம் நேற்று (26-08) உரும்பிராயில் உள்ள அன்னாரின் சிலையில் தியாகி பொன் சிவகுமார் நினைவேந்தல் குழு உறுப்பினர் எஸ்.செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது. இதன் போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய அமைப்பாளர் ப.சீவரத்தினம  மற்றும் நினைவேந்தல் குழு உறுப்பினர்கள் உட்பட சிலர் கலந்து கொண்டனர். பொன்னுத்துரை சிவகுமாரன் ஈழ விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒரு முன்னோடி ஆவார். யாழ்ப்பாணம், உரும்பிராயில் காவற்துறையினரின் சுற்றி வளைப்பில் நஞ்சருந்தி வீரச்சாவை […]

உள்ளூர் கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலை பிணையில் விடுவிப்பதற்காக நீதிமன்றில் நடந்த வாதப்பிரதிவாதங்களின் முழு விபரமும் உள்ளது

  • Aug 27, 2025 - 06:17 AM
  • 0 Comments

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, தலா 50 லட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் இன்று (26) நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. எவ்வாறாயினும், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி, மருத்துவ ஆலோசனையின் பேரில் இன்று நீதிமன்றில் ஆஜராகாமல், சூம் தொழில்நுட்பம் ஊடாக வழக்கில் இணைந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த […]

உள்ளூர் செய்திகள்

மக்கள் ஆட்சியில் இல்லாத மாகாண சபை ஜனநாயகத்திற்கு ஏற்புடையதல்ல-தேர்தல்கள் ஆணையாளர்

  • Aug 27, 2025 - 05:58 AM
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான உறுதியான சட்டம் தற்போது இல்லையென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, மாகாண சபைத் தேர்தலை நடத்த தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டமியற்றும் அதிகாரம் கிடையாது. எனவே, அவ்விதமான தேர்தலை விரைவில் நடத்த அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஜனநாயக முறைமைக்கமைய தேர்தலை நடத்த முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் அவர் வலியுறுத்தினார். தேர்தல் முறைமை குறித்து நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் மேலும் […]

உள்ளூர் செய்திகள்

ரணில் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி.

  • Aug 26, 2025 - 04:49 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சந்தேக நபரை தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்தில் கொண்டு கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகளை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இந்நாள் பிரதமர் முன்னாள் ஜனாதிபதியை பார்க்கவில்லை.

  • Aug 26, 2025 - 08:42 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்த்ரீ விக்ரமசிங்க உடன் நேற்று (25-08) அதிகாலை நேரத்தில் சந்தித்ததாக பரவிய செய்திகளை பிரதமரின் அலுவலகம் முற்றிலும் மறுத்துள்ளது.

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான “Z” வெட்டுப் புள்ளி வெளியிடப்பட்டது

  • Aug 26, 2025 - 08:27 AM
  • 0 Comments

2024 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயர்தரப் பரீட்சையின் முடிவுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் பல்வேறு பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறியில் இணைவதற்கு தேவையான குறைந்தபட்ச “Z” மதிப்பெண்கள் தொடர்புடைய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன. மாணவர்கள் பின்வரும் முறைகள் மூலம் தாங்கள் தேர்ந்தெடுத்த பாடநெறி மற்றும் பல்கலைக்கழகத்தை தெரிவுசெய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள. 1. பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மூலம் இணையதளம்: www.ugc.ac.lk 2. பல்கலைக்கழக மானியங்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணில் இன்று நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார்.

  • Aug 26, 2025 - 08:05 AM
  • 0 Comments

கொழும்பு கோட்டை நீதவான்; நீதிமன்ற நீதிபதி நிலுபுலி லங்கபுரா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆகஸ்ட் 26ஆம் திகதி வரை அதாவது இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார். இன்று (26) நீதிமன்றத்தில் அவர் முன்னிலையாவது அவசியம் என தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அவரது உடல்நிலை காரணமாக சிறைச்சாலையினர் அவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல முடியாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐஊரு) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர், அவர் முதலில் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

ரணிலுக்கு ஆதரவாக சஜித்தும் களமிறங்கினார்.

  • Aug 26, 2025 - 07:50 AM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சம்பவம் நாட்டை ‘ஒழுங்கற்ற ஆட்சிக்குள் இட்டுச் செல்கிறது’ என எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டு அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளனர். அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், பிணைக்கு உரியதல்லாத குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் ஜனாதிபதியை கைது செய்து விளக்கமறியலில் வைப்பது பல்கட்சி ஜனநாயக அமைப்புக்கு எதிரானது என்றும், இலங்கையின் ஜனநாயக வாழ்க்கை முறைக்கு நேரடியான தாக்குதலாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அறிக்கையில் மேலும், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ மற்றும் தனிப்பட்ட செலவுகளைத் தெளிவாகப் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp