உள்ளூர் செய்திகள்

பாதாள உலக கோஸட்டியினரோடு கைது செய்யப்பட்ட பெண்ணும் குழந்தையும் நாடு கடத்தப்பட்டனர்

  • Aug 31, 2025 - 06:33 AM
  • 0 Comments

பாதாள உலக கோஸட்டியினர் சிலர், இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து நேற்று (30-08) மாலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களில் புகழ் பெற்ற குற்றவாளி மண்டினு பத்மசிறி என அழைக்கப்படும் ‘கெஹெல்பட்டறா பத்மே’ உட்பட பலர் அடங்குவர் என்று காவல் துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்காக இலங்கையிலிருந்து சிறப்பு காவல் துறை குழுவினர் நேற்று முன்தினமே ஜகார்த்தாவுக்கு அனுப்பப்பட்டு, அங்கு இந்தோனேஷியா அதிகாரிகளிடம் இருந்து குற்றவாளிகளை காவலில் பெற்று, இலங்கை நோக்கி விமானத்தில் ஏற்றி வந்துள்ளனர் […]

உள்ளூர் செய்திகள்

மஹிந்த மற்றும் மைத்திரியின் நிதி மோசடி குற்றச் செயல்களின் விசாரணைகளை சிறப்பு அணியினர் ஆரம்பித்துள்ளனர்

  • Aug 31, 2025 - 06:18 AM
  • 0 Comments

மஹிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது பொதுமக்கள் நிதி மோசடி மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. சமீபத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுதலையான சம்பவத்துக்குப் பிந்தைய நிலையில், இந்த நடவடிக்கைகள் அதிக கவனம் பெற்றுள்ளன. பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ‘அனைத்து முக்கிய வழக்குகளும் தற்போது அரசாங்கத்தின் […]

செய்திகள் முக்கிய செய்திகள்

ஐயோ… வீட்டு சாப்பாட்டை சாப்பிட விடுங்கோவன்- முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன

  • Aug 30, 2025 - 08:28 PM
  • 0 Comments

வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, வீட்டு உணவுகளை பெற்றுக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. சிறைச்சாலை வைத்தியர்கள் அவரை பரிசோதித்தபோது, வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அளவுக்கு உடல்நிலை பிரச்சினை எதுவும் இல்லை எனவும் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளுடன் தொடர்பில், தனது கைது தொடர்பான பிடியாணை உத்தரவை தற்காலிகமாக இரத்து செய்யுமாறு ராஜித சேனாரத்ன தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் முன்னர் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

பாதாள உலக கோஷ்டி கொழும்புக்கு இழுத்துவரப்பட்டனர்

  • Aug 30, 2025 - 08:17 PM
  • 0 Comments

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக கோஷ்டி இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். அவரகள்; கட்டுநாயக்க விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுவட்டாரத்தில் கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

உள்ளூர் செய்திகள்

ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சிங்கள தேசம்

  • Aug 30, 2025 - 08:00 PM
  • 0 Comments

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60ஆவது அமர்வு ஜெனீவாவில் வரும் செப்டெம்பர் 8ஆம் திகதி ஆரம்பமாக உள்ளது. இந்த அமர்வில், மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டுர்க் இலங்கை தொடர்பான தனது புதிய அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார். அறிக்கையில், இலங்கையின் மனித உரிமை நிலைமை, சட்ட நடைமுறைகள் மற்றும் அரசின் ஒத்துழைப்புகள் குறித்த மதிப்பீடுகள் இடம்பெற உள்ளன. இதனால், இலங்கை இராணுவத்தினருக்கு போர்க்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர்கள் சர்வதேச அரங்கில் குற்றவாளிகளாக காட்டப்படுவார்கள் என முன்னாள் அமைச்சர் ரியர் […]

உள்ளூர் செய்திகள்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியிலிருந் மீட்கப்பட்ட பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

  • Aug 30, 2025 - 07:53 PM
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட பிற பொருட்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் அகழ்வாராய்ச்சியின் போது, துப்பாக்கிச் சூடு மற்றும் வெடிப்பு காயங்களால் உயிரிழந்த ஐம்பதுக்கும் மேற்பட்டோரின் எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன. நீதிமன்ற உத்தரவின்படி புதைகுழி மூடப்பட்ட நிலையில், அங்கிருந்து மீட்கப்பட்ட பிற பொருட்களின் அடையாளத்தை வெளிப்படுத்த யாரும் இதுவரை முன்வரவில்லை. இலங்கையின் ஆறாவது பெரிய மனித புதைகுழியாகக் கருதப்படும் கொக்குத்தொடுவாய் வழக்கு, முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் விசாரணைக்கு […]

உள்ளூர் செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்

  • Aug 30, 2025 - 07:41 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 06ஆம் திகதி விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார். அதே நாளில் கட்சியின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அவர் அங்கு உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி, கடந்த 26ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை விடுவிக்கும் உத்தரவு, கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுரவால் பிறப்பிக்கப்பட்டது. குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பின் சட்டத்தரணிகள் முன்வைத்த உண்மைகள், மேலும் சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ அறிக்கைகள் […]

உள்ளூர் செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வடக்கு–கிழக்கில் ஆர்ப்பாட்டம்

  • Aug 30, 2025 - 07:27 PM
  • 0 Comments

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு இன்று வடக்கு மற்றும் கிழக்கை தழுவிய கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இணைந்து பங்கேற்றனர். தங்கள் அன்புக்குரியவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதற்கான நீதியை கோரியும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் வலியுறுத்தினர். அதன் மூலம், பல ஆண்டுகளாக நீதி தேடி வரும் குடும்பங்கள் தமது குரலை மீண்டும் உலக சமுதாயத்திற்கு எடுத்துச் சென்றுள்ளன.

கட்டுரை

அவசரச் சாலைப் பேருந்துகளில் கட்டாய சீட் பெல்ட் சட்டம் – சாலைப் பாதுகாப்புக்கு கூடுதல் நடவடிக்கைகள் அவசியம்

  • Aug 30, 2025 - 09:41 AM
  • 0 Comments

கொழும்பு, ஆகஸ்ட் 30 – விரைவுச்சாலைகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்ற கட்டாய விதிமுறையை கொண்ட வர்த்தமானி விரைவில் வெளியிடப்படவுள்ளது. அதிகரித்து வரும் விபத்துகளை முன்னிட்டு இந்நடவடிக்கை தாமதமாகிய ஒன்று என்றே கூறப்படுகிறது. சீட் பெல்ட் அணிவது உயிரிழப்புகளையும், நிரந்தர மாற்றுத்திறன்கள் உள்பட கடுமையான காயங்களையும் தடுப்பதில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் சில பேருந்து சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், விதிமுறையை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பதால், அவர்கள் சட்டத்துக்கு இணங்க ஒத்துக் […]

உள்ளூர் செய்திகள்

இலங்கையுட்பட டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானதென அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

  • Aug 30, 2025 - 09:08 AM
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு, டிரம்பின் வெளிநாட்டு கொள்கைக்கு பெரிய சவாலாக அமையக்கூடும். டிரம்ப் உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு விதித்த “Reciprocal Tariffs” மற்றும் சீனா, மெக்சிகோ, கனடா ஆகியவற்றுக்கு விதித்த கூடுதல் வரிகளும் இத்தீர்ப்பின் கீழ் பாதிக்கப்படுகின்றன. அமெரிக்க கூட்டாட்சி மேல்முறையீட்டு நீதிமன்றம் 7க்கு 4 என்ற வாக்கு வித்தியாசத்தில், டிரம்ப் அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தை (IEEPA) […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp