உள்ளூர்

ரணில் விக்ரமசிங்க தற்போது வாசிக்கும் நூல்.

  • Sep 5, 2025 - 05:38 PM
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கஇ இந்த நாட்களில் மற்றொரு புதிய நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. கொழும்பு தேசிய மருத்துவமனையில் இருந்து வெளியாகும் போது அவர் கையில் வைத்திருந்த நூல் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. தற்போது அவர் வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய “THE GOLDEN ROAD” என்ற நூலை வாசிக்கத் தொடங்கியுள்ளதாக அறியமுடிகிறது. பண்டைய இந்தியா உலகை எவ்வாறு மாற்றியது மற்றும் பௌத்தம் உலகை எவ்வாறு சென்றடைந்தது என்பதைக் குறித்த நூல் விபரிக்கிறது. இதையும் படியுங்கள்>எல்ல பேருந்து […]

உள்ளூர்

எல்ல பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!

  • Sep 5, 2025 - 05:27 PM
  • 0 Comments

ஊவா மாகாணம், பதுளை மாவட்டம் எல்ல – வெல்லவாய வீதியில் நேற்று இரவு நிகழ்ந்த பயங்கர பேருந்து விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக உயர்வடைந்துள்ளது. விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 9 பெண்களும், 6 ஆண்களும் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 11 ஆண்கள், 7 பெண்கள் மற்றும் 5 குழந்தைகள் அடங்குவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய தங்காலை நகர […]

உள்ளூர் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி

  • Sep 5, 2025 - 06:49 AM
  • 0 Comments

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) பெற்றுள்ள 10,517 முறைப்பாடுகளின் விசாரணைகளை 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய விசேட திட்டம் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரத்தின்படி, 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன. இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெறுவர். இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பணியில் ஈடுபடவுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் […]

உள்ளூர் செய்திகள்

நாளை யாழ் செம்மணியில் 2ம் கட்ட அகழ்வு பணிகள் நிறைவுறுகின்றது

  • Sep 5, 2025 - 06:39 AM
  • 0 Comments

செம்மணி புதைகுழியில் இருந்து எட்டு எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தற்போது அவற்றை சுத்திகரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதைக்குழியில் இருந்து எடுக்கப்பட்ட எலும்புக்கூட்டுகள் தொடர்பான துல்லியமான தகவல்களை, அகழ்வுப் பணிகள் முடிந்த பின்பே தெரிவிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை (03-09) குறுக்காக காணப்பட்ட இரண்டு எலும்புக்கூட்டுகள் மற்றும் ஒரு எலும்புக்கூட்டின் தோள்பட்டையுடன் இணைந்திருந்த மற்றொன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டன. மேலும், இன்றைய அகழ்வின்போது சட்டைப் பொத்தான்கள், நாணயம் மற்றும் கைகளில் கட்டும் சிறிய தாயத்து […]

கட்டுரை செய்திகள் முக்கிய செய்திகள்

படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் தொடர்பில் ஐ.நா நடவடிக்கை

  • Sep 5, 2025 - 06:28 AM
  • 0 Comments

வடக்கும் கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக நீடித்து வரும் காணிப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச புலம்பெயர்வு அமைப்பின் (IOM) ஒத்துழைப்புடன் விசேட செயற்திட்டமொன்றை தயாரித்து வருகிறது. வட, கிழக்கு பகுதிகளில் நில எல்லை நிர்ணயம், படையினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் தனியார் காணிகள், அரசாங்க கட்டமைப்புகள் மற்றும் பல்வேறு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட காணி சுவீகரிப்புக்கள் போன்ற பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படாத நிலையிலேயே உள்ளன. இந்த பிரச்சினைகளுக்கு நியாயமான மற்றும் சுமுகமான தீர்வுகளை ஏற்படுத்துவதற்காக புதிய செயற்திட்டம் […]

உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் சேவை வரி அமுலாக்கம் ஒத்திவைப்பு.

  • Sep 4, 2025 - 10:13 PM
  • 0 Comments

2025 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க பெறுமதி சேர் வரி (திருத்தச்) சட்டத்தின் மூலம் 2025.10.01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்குவரும் வகையில் வதிவிடமற்ற ஆட்களால் (Non – Resident) டிஜிட்டல் சேவை வழங்கல்களுக்கு பெறுமதி சேர் வரி சேர்க்கப்பட்டுள்ளது. ஆயினும், டிஜிட்டல் சேவைகளுக்கான பெறுமதி சேர் வரி அறிவிடும் போது அதற்கு இயங்கியொழுகுவதற்கு தயாராவதற்கு மேலதிக காலத்தை வழங்குமாறு நடைமுறைச் சாத்தியமான பல காரணங்கள் குறிப்பிடப்பட்டு வதிவிடமற்ற சேவை வழங்குநர்களால் கோரப்பட்டுள்ளது. அதற்கமைய, 2025.10.01 […]

உள்ளூர் செய்திகள்

மன்னாரில் 33வது நாளாக தொடரும் போராட்டம்.

  • Sep 4, 2025 - 10:06 PM
  • 0 Comments

மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுழற்சி முறையிலான போராட்டம் இன்று 33 நாளாகவும் இடம்பெற்றது. மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் இளையோர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து குறித்த போராட்டத்தை சுழற்சி முறையில் முன்னெடுத்து வருகின்றனர். மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் முன்னெடுக்கப்படும் இப் போராட்டத்திற்கு பல்வேறு கிராம மக்கள் வர்த்தகர்கள் பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்கியுள்ளன. […]

உள்ளூர் செய்திகள்

கெஹெல்பத்தர பத்மே – ஐஸ் தொழிற்சாலை தொடர்பில் புதிய தகவல்கள்

  • Sep 4, 2025 - 09:57 PM
  • 0 Comments

நுவரெலியாவில் கெஹெல்பத்தர பத்மே நடத்தி வந்ததாக கூறப்படும் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையத்தில் இரண்டு பாகிஸ்தானியர்கள் பணியாற்றியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து இத்தகவல் வெளிப்பட்டுள்ளதாகவும், இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் செயல்பாடுகள், அரசியல்வாதிகளின் ஆதரவு, அவர்களுடனான தொடர்புகள் ஆகியவை படிப்படியாக வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், குறித்த ஐஸ் தொழிற்சாலை அமைப்பதற்காக 4 மில்லியன் […]

உள்ளூர் செய்திகள்

உயர் பொலிஸ் அதிகாரி வாகனத்தை ஒத்த ஜீப் கண்டியில் பறிமுதல்

  • Sep 4, 2025 - 09:53 PM
  • 0 Comments

உயர் பொலிஸ் அதிகாரியின் உத்தியோகபூர்வ வாகனத்தை ஒத்த வடிவமைப்புடைய நவீன ஜீப் வாகனம், கண்டி தலைமையக பொலிஸின் போக்குவரத்துப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாரின் தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட ஜீப்பில் இருவர் பயணித்ததோடு, பொலிஸார் பயன்படுத்தும் வகையிலான இரண்டு வாக்கி-டாக்கிகள் கண்டறியப்பட்டன. முன்பக்க கண்ணாடியைத் தவிர, அனைத்து கண்ணாடிகளும் முழுமையாக கருப்பாக மாற்றப்பட்டிருந்தன. சில சந்தர்ப்பங்களில், இவ்வாகனத்தில் உயர் பொலிஸ் அதிகாரி பயணிப்பதாக எண்ணிய போக்குவரத்து பொலிஸார் சல்யூட் செய்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இந்த ஜீப்பின் உரிமையாளர், கண்டி […]

உள்ளூர் செய்திகள்

கஞ்சா பயன்படுத்திய பேருந்து சாரதி கைது.

  • Sep 4, 2025 - 09:47 PM
  • 0 Comments

பேருவளை நகரில் இன்று (04) பேருந்து சாரதிகளுக்கான விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்த போது, களுத்துறை – அளுத்கம வழித்தட தனியார் பேருந்து சாரதி ஒருவரை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவரை களுத்துறை போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்தியபோது, அவர் கஞ்சா பயன்படுத்தியிருந்தது உறுதி செய்யப்பட்டது. 41 வயதான இச்சாரதி சிறிது காலமாக கஞ்சாவுக்கு அடிமையாகி இருப்பது மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். பேருவளை […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp