கட்டுரை

இலங்கை கடந்தகாலத்தைச் சந்திப்பது என்பது போர் குற்றங்கள் மட்டும் அல்ல

  • Sep 17, 2025 - 11:08 AM
  • 0 Comments

இலங்கை அரசு சமீபத்தில் சர்வதேச சமூகத்திடமிருந்து பெற்றிருக்கும் பதில்கள் மூலம் திருப்தி அடையக் கூடிய நிலையை பெற்றுள்ளது. மூன்று சர்வதேச கண்காணிப்பு அமைப்புகள் அரசுக்கு சாதகமான அறிக்கைகளை வழங்கியுள்ளன. முதலில், ஸ்வீடனில் அமைந்துள்ள International Institute for Democracy and Electoral Assistance (IDEA) வெளியிட்ட Global State of Democracy Index 2025 அறிக்கையில், இலங்கை கடந்த ஆண்டைவிட 15 இடங்கள் முன்னேறி 173 நாடுகளில் 58வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 73வது […]

இந்தியா செய்திகள்

இந்தியா அமெரிக்காவுடன் நடத்திய வர்த்தக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம்.

  • Sep 17, 2025 - 09:51 AM
  • 0 Comments

இந்தியா அமெரிக்காவுடன் நேற்று (16-09) நடத்திய வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றமடைந்துள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷிய எண்ணெய் கொள்முதல் தொடர்பாக அமெரிக்கா விதித்த வரிகளுக்குப் பின் தமது அதிருப்தியினை குறைத்த ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த பேச்சுவார்த்தைகளை ஊக்கமளிக்கும் வகையில் மாற்றியதாக தெரிகிறது டிரம்ப் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று செவ்வாய்க்கிழமை தொலைபேசியில் உரையாடியுள்ளனர்; மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி டிரம்ப் பிரதமர் மோடிக்கு ரஷ்யா மற்றும் யுக்ரைன் இடையிலான […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

தமிழ்தேசிய கட்சிகளும் சிங்கள கட்சிகளும் சுவிஸ்லாந்தில் பேச்சுவார்த்தை

  • Sep 17, 2025 - 09:21 AM
  • 0 Comments

இலங்கையில் நீண்டகாலமாக நிலவி வரும் இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில், சுவிஸ்லாந்து அரசாங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று மாலை முக்கிய கலந்துரையாடல் ஒன்றை நடத்தப்பட்டது. இதே கலந்துரையாடல் இன்று புதன்கிழமை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 19 உறுப்பினர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்றனர். இதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், ஜேவிபியின் மூத்த உறுப்பினர்கள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் சில முக்கிய பிரமுகர்கள் அடங்கினர். சுவிஸ்லாந்தில் நடைபெறும் கலந்துரையாடல் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

CEB யூனியன் இன்று மற்றும் நாளையும் போராட்டம்

  • Sep 17, 2025 - 08:00 AM
  • 0 Comments

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், அரசு CEB ஐ நான்கு தனி நிறுவனங்களாக பிரிக்க முடிவெடுத்ததை எதிர்த்து போராட்டம் நடத்துகிறது. கடந்த திங்கள் (15) முதல் ஆரம்பிக்கப்பட்ட முதல் கட்டம் முடிந்தது, இப்போது இரண்டாம் கட்டம் இன்று (17) மற்றும் நாளை (18) நடைபெற உள்ளது. இந்த இரண்டு நாட்களில் தொழில்சங்க உறுப்பினர்கள் வேலை செய்யாமல், குறிப்பாக சில உத்தியோகப்பூர்வ சந்திப்புகள் மற்றும் கேள்வி அறிவித்தல் தொடர்பான வேலைகளில் பங்கேற்காமல் இருப்பார்கள். இதன் மூலம் அவர்கள் […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

மாகாணசபை சபை தேர்தல் நடாத்த 2026 பட்ஜெட்டில் 10 பில்லியன் ரூபா ஒதுக்குமாறு கோரிக்கை

  • Sep 17, 2025 - 07:42 AM
  • 0 Comments

தாமதமாக நடைபெறும் மாகாண சபை தேர்தல்களை நடத்த தேர்தல் ஆணையம் அடுத்த ஆண்டு (2026) வரவுசெலவு திட்டத்தில் ரூ. 10 பில்லியன் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்த்னாயக்க ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், தேர்தலுக்கான நிதி வருடாந்தம் கோரப்படுவதாகவும், தேர்தல்கள் நடைபெறும் வரை இந்த கோரிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்தார். ‘தேர்தல் நடக்கவிருக்கும் பொழுது தேவையான நிதியை கோருகிறோம். கடந்த ஆண்டு (2024), மாகாணசபை தேர்தலுக்காக நிதி கோரப்பட்டதன் பிறகு தேர்தல்கள் நடக்காத […]

உள்ளூர் செய்திகள்

நல்லாட்சி அரசாங்கம் இணங்கிய 2015 ஜெனீவா தீர்மானத்திலிருந்த வெளிநாட்டு நீதிபதிகள் என்பது நீக்கப்பட்டுள்ளது.

  • Sep 17, 2025 - 07:00 AM
  • 0 Comments

இலங்கை தொடர்பான சமீபத்திய ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளதாக முன்னாள் உயர் இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஆதரித்த தீர்மானத்தில், எந்தவொரு பொறுப்புகூறல் செயல்முறைக்கும் நம்பகத்தன்மை ஏற்படுத்த சர்வதேச பங்கேற்பு அவசியம் என வெளிப்படையாக வலியுறுத்தப்பட்டிருந்தது. அதில், வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறும் கலப்பு போர் குற்ற விசாரணை அமைப்பை அமைக்க நல்லாட்சி அரசு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அமெரிக்கா இணைந்துகொண்டிருந்தமை […]

உள்ளூர் செய்திகள்

‘ஐஸ்’ போதைப்பொருளை கண்டறிய ஐ.நா வழங்கிய கருவிகளை பயன்படுத்திய போதும் கன்டெய்னர் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை?

  • Sep 17, 2025 - 06:40 AM
  • 0 Comments

அண்மையில் கண்டறியப்பட்ட கன்டெய்னரில் எடுத்த 20 மாதிரிகளில் 17 மாதிரிகள் ‘கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமைன்’ ஐஸ் எனும் போதைப் பொருள் இருப்பதை தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை (NDDCB) உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கடும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஈரான் நாட்டிலிருந்து 2024 டிசம்பரில் வந்த இரண்டு கன்டெய்னர்கள், 2025 ஜனவரியில் இலங்கை சுங்கத்தால் முழுமையான சோதனையுடன் விடுவிக்கப்பட்டிருந்தன. அவை ஐ.நா போதைப்பொருள் மற்றும் குற்றக் கட்டுப்பாட்டு அலுவலகம் (UNODC) வழங்கிய […]

உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

இலங்கை மீது சுயாதீன விசாரணை அவசியமென அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார்

  • Sep 17, 2025 - 06:19 AM
  • 0 Comments

இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை நிலைநாட்ட சுயாதீன விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் சம்மர் லீ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப்புதைகுழி தொடர்பில், ஏற்கனவே அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் ராஜா கிருஷ்ணமூர்த்தி மற்றும் டெபோரா ரோஸ் ஆகியோர் தமது எக்ஸ் தளப்பக்க பதிவுகளின் மூலம் ஆழ்ந்த கவலை வெளியிட்டிருந்தனர். அவர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கையை ஆதரித்து, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என […]

உள்ளூர் செய்திகள்

புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரிக்கை

  • Sep 17, 2025 - 06:06 AM
  • 0 Comments

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனவழிப்புடன் தொடர்புபட்டதாக, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் எனக் கோரி புலம்பெயர் தமிழர்கள் கடந்த திங்கட்கிழமை (15-09) சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில்; கவனயீர்ப்புப் பேரணியொன்றை முன்னெடுத்தனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்கநாள் அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். பின்னர் அதனைச் சார்ந்த விவாதங்களும் இடம்பெற்றன. இதனையடுத்து, பிரிட்டன் தலைமையில் கனடா, […]

உள்ளூர் செய்திகள்

சீனாவும் பாகிஸ்தானும் கொண்டுவந்த இலங்கை தொடர்பான புதிய பிரேரணையை பிரிட்டன் நிராகரித்தது

  • Sep 17, 2025 - 05:57 AM
  • 0 Comments

ஜெனிவாவில் நடைபெற்ற உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலின்போது, இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் செயற்திட்டத்தை இரண்டு வருடங்களுக்கு பிற்போடுமாறு சீனா மற்றும் பாகிஸ்தான் முன்வைத்த கோரிக்கையை பிரிட்டன் நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் செப்டம்பர் 8ஆம் திகதி ஜெனிவாவில் தொடங்கியது. தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கை குறித்த எழுத்துமூல அறிக்கையை சமர்ப்பித்தார். அதைத் தொடர்ந்து அதனைச் சார்ந்த விவாதமும் இடம்பெற்றது. இலங்கை தொடர்பில் ஏற்கனவே கால […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp