உள்ளூர் முக்கிய செய்திகள்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா இயற்கை எய்தினார்!

  • Jan 29, 2025 - 06:03 AM
  • 0 Comments

இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜா 28.01.2025 காலை தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிலையில் CT SCAN பரிசோதனையில் வைத்திய நிபுணர்கள் தலையில் கணிசமான அளவில் இரத்தப் பெருக்கு இருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சையளிக்கப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னால் நாடாளுமன்ற உறுப்பினறுமான மாவை சேனாதிராஜா வீட்டில் தவறி விழுந்த நிலையில் […]

செய்திகள்

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • Jan 14, 2025 - 02:26 AM
  • 0 Comments

தமிழர்களினால், வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பொங்கல் திருநாள் முதன்மையானது. அறுவடை திருநாளாக பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நமது மண்ணின், பாரம்பரியத்தை பறைசாற்றும் பண்டிகைகளில் பொங்கல் விழா என்றுமே முதன்மையாக உள்ளது. சூரியன் உட்பட நம்மை வாழ வைக்கும், இயற்கைக்கு நன்றி சொல்லவும், வேளாண்மை தொழிலை பெருமைப்படுத்தவும், இயற்கையின் இன்றியமையாமை என்றும் பாதுகாக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு சிறப்பம்சங்களோடு, பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் தெலங்கானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் அறுவடை […]

உள்ளூர் செய்திகள்

10 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது வார சபை அமர்வு நேரலை!

  • Dec 3, 2024 - 10:25 AM
  • 0 Comments

  பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது பாராளுமன்ற வார சபை அமர்வு இன்று (03) சபாநாயகர் அசோக ரங்வல தலைமையில் கூடியுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 09.30 மணிக்கு கூடியுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இடம்பெறவுள்ளது. இதையும் படியுங்கள்> ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பிறப்பித்த உத்தரவு!  

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்..!

  • Apr 7, 2026 - 05:20 PM
  • 0 Comments

யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊராட்சி முற்றக் கலந்துரையாடல்! யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில், கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் இன்றைய தினம் (07.04.2026) பி. ப. 02.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் மற்றும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி தாரணி கஜரூபன் ஆகியோரது இணைத் தலைமையில் நடைபெற்றது. இக் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் கைது..!

  • Apr 7, 2026 - 05:14 PM
  • 0 Comments

நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் அபிவிருத்திப் பணிகளுக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது, தேசிய அரசு சபையால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல், 2021ஆம் ஆண்டில் அரசிற்குச் சொந்தமான நிலமொன்றில் கட்டுமானத் திட்டத்திற்கு அனுமதி வழங்கி, விண்ணப்பதாரருக்குச் சாதகமாகச் செயற்பட்டதன் மூலம் ‘ஊழல்’ செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

யாழ் மருதனார்மடம் தோட்ட கிணற்றில் இனந்தெரியாத நபரின் சடலம்..!

  • Apr 7, 2026 - 05:12 PM
  • 0 Comments

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள தோட்ட கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அவதானிக்கப்பட்டது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்திகள் உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபருடன் யாழ் பாதுகாப்பு படைத்தளபதி உத்தியோகபூர்வ சந்திப்பு..!

  • Apr 7, 2026 - 05:08 PM
  • 0 Comments

கெமுனு ஹேவா படையணியின் மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பீ.கே நவரத்ன ஆர்டப்ளியூ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் யாழ்.பாதுகாப்பு படை தலைமையகத்தின் 35 வது தளபதியாக 2026 ஏப்ரல் 04 அன்று கடமைகளை பொறுப்பேற்றிருந்தார். இன்றைய தினம்(07.04.2026) கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு உத்தியோக பூர்வ விஜயத்தினை மேற்கொண்ட மேஜர் ஜெனரல் கே.ஜே.என்.எம்.பி.கே. நவரத்ன அவர்கள் மாவட்ட அரசாங்க அதிபருடனான சந்திப்பொன்றை மேற்கொண்டார். இச் சந்திப்பின் போது மாவட்டத்தின் பாதுகாப்பு நிலை, பொதுமக்கள் நலன், அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈழத்தமிழ் இளைஞருக்கு பிரித்தானியாவில் சிறைத்தண்டனை..!

  • Apr 7, 2026 - 10:25 AM
  • 0 Comments

பிரித்தானியாவில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாகவும், அநாகரீகமாகவும் நடந்து கொண்ட ஈழத்தமிழ் இளைஞர் ஒருவருக்கு 16 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 38 வயதான சுகீர்தன் தங்கராசா என்பவர் போர்ட்ஸ்மவுத் மற்றும் சவுத்தாம்ப்டன் பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது. கடந்த ஆண்டு புரட்டாதி 15ஆம் திகதி, கிங்ஸ்டன் மயானம் பகுதியில் சிறுவனை நோக்கி ஆபாச மற்றும் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டிய சம்பவம் தொடர்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பு, ஆவணி மாதம் அவர் தங்கியிருந்த […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

நல்லூர் மந்திரி மனை அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது..!

  • Apr 7, 2026 - 10:21 AM
  • 0 Comments

யாழ்ப்பாணத்தின் தொன்மையான வரலாற்று சின்னமான நல்லூர் மந்திரி மனை கண் முன்னே அழிந்து போவதை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது , அதனை புனரமைப்பது தொடர்பாக நல்லூர் மந்திரிமனையின் நம்பிக்கை பொறுப்பாளர்களும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து இரு வாரங்களுக்குள் ஒரு முடிவுக்கு வர வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கோரியுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது இல்லத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

சித்திரை புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்..!

  • Apr 7, 2026 - 10:16 AM
  • 0 Comments

சித்திரப் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக விசேட பேருந்து சேவையை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்துச் சபை தீர்மானித்துள்ளது. எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் இந்த பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. தூர இடங்களுக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக சுமார் 250 பேருந்துகள் வரை சேவையில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை குறிப்பிட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல பேருந்துகளைச் சேவையில் ஈடுபடுத்தவும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதம் […]

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

உலகப் பொருளாதாரம் மந்தமடையும் என IMF எச்சரிக்கை..!

  • Apr 7, 2026 - 10:11 AM
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு […]

உள்ளூர் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

மின்சாரம் தாக்கி இருவர் சாவு..!

  • Apr 7, 2026 - 10:05 AM
  • 0 Comments

பொல்கஹவெல, பங்களாவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி இருவர் சாவடைந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்கள் எஹெலியகொட பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். பயிர் நிலத்தை வனவிலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் மோதியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக, குறித்த காணியின் காவலாளியாகப் பணியாற்றிய ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொல்கஹவெல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உலகம் செய்திகள் புதியவை முக்கிய செய்திகள்

ஈரானை ஒரே இரவில் அழித்துவிடுவோம்..!

  • Apr 7, 2026 - 10:00 AM
  • 0 Comments

ஈரானை ஒரே இரவில் அழித்துவிட முடியும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்காக ஈரானுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (07) இரவு 8.00 மணியுடன் நிறைவடைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ட்ரம்ப் இதனைத் தெரிவித்தார். இன்று இரவு 8.00 மணிக்குள் தமக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய உடன்படிக்கைக்கு ஈரான் வரத் தவறினால், அந்த நாட்டுக்கு எதிராகக் கடுமையான அழிவுகரமான தாக்குதல்கள் நடத்தப்படும் […]

Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp