யாழ் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்றலில் இன்றைய தினம்(10.04.2026) காலை 9:30 மணியளவில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விற்பனை சந்தை ஒன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இவ் விற்பனை சந்தையில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது உற்பத்தி சார் பொருட்களை சந்தைப்படுத்தினர் மற்றும் மரக்கறி வகைகள் மற்றும் ஆடைகள் மெழுகுதிரி சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தப்பட்டது
மற்றும் இவ் சந்தையினை வடமராட்சி கிழக்கு பிரதேச உப செயலாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர் மற்றும் கணக்காளர் என்போர் மங்கள விளக்கேற்றி நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தனர்.


What’s your Reaction?
