மாத்தறை, வெலிகமை, ஹெட்டிவீதிக்கு அருகில் உள்ள ரயில் மார்க்கத்தில் இன்று சனிக்கிழமை (01) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவனக்குறைவாக பயணித்த கார் ஒன்று ரயிலுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது, காரில் பயணித்த பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
