கொழும்பில் வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
கடந்த 18 ஆம் திகதி திகதி வெள்ளவத்தையில் உள்ள தனியார் வைத்தியசாலை விடுதிக்கு வெளியே பெண்ணொருவருவர் வாகனத்தில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டார்.
கடத்தப்பட்ட பெண்ணிடம் இருந்து 31,500 ரூபாய் பணம் மற்றும் பிற பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்த கடத்தல்காரர்கள் வெலிக்கடைப் பகுதியில் பெண்ணை கைவிட்டு சென்றுள்ளனர்.
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
குறித்த காணொளியை கண்ணுற்ற வெள்ளவத்தை பொலிஸார் கடத்தலுடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் உருவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
