பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றுகின்றவர்களின் இடமாற்றங்களை ஒழுங்கு கிரமமாக செய்வதற்கே பொலிஸ் ஆணைக்குழு உள்ளது.
ஆனால் பொலிஸ் ஆணைக்குழுவும் இழுத்தடிப்பு செய்கிறது.
பொது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காகவே சில இடமாற்றங்களை கோருகின்றோம் என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆனால் ஆணைக்குழு அதனை சரியாக செய்யவில்லையென தெரிவித்துள்ளது
இந்த நாட்டை போதைப்பொருள் மற்றும் பாதாளா உலகக்குழுக்களிடமிருந்து கட்டம் கட்டமாக மீட்டெடுக்க திட்டமிட்டுள்ளார்
;அதேபோன்று திருடர்களை பிடிக்கவில்லையா என சிலர் எம்மிடம் வினவுகின்றனர்?
அவர்களை சிறையில் அடைக்க முடியாத எனக் கேட்கின்றனர்.
தற்போது சிலர் கைது செய்யப்படுகிறார்கள். விளக்கமறியில் வைக்கப்படுகிறார்கள்.
அது மாத்திரம் போதாது.முறையாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்கு தண்டனைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்
