இந்தியா

தமிழகத்தில் மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் ஸ்டாலினின் சாதனை- எடப்பாடி பழனிசாமி

சென்னையில் நடைபெற்ற எம்.ஜி.ஆரின் 108-வது பிறந்தநாள் விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:

எம்.ஜி.ஆர். பெயரை உச்சரிக்காமல் தமிழகத்தில் யாராலும் ஆட்சி நடத்த முடியாது.
எம்.ஜி.ஆர்இ ஜெயலலிதாவுக்கு வாரிசுகள் இல்லை. நாம் தாம் வாரிசு.

நான் என்ன மிட்டா மிராசாஇ தொழிலதிபரா? சாதாரண தொண்டன்.

கட்சிக்கு உழைத்துஇ விஸ்வாசமா இருந்தா கதவ தட்டி பதவி கொடுக்குற கட்சிதான் அ.தி.மு.க.

சட்டசபை தேர்தலில் 522 அறிவிப்பை வெளியிட்ட தி.மு.க. அரசுஇ அதில் 20 சதவீத அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லையென எடப்பாடி பழனிசாமி தமிழக அரசு மீது குற்றம் சுமத்தியுள்ளார்

ரேசன் கடையில் தற்போது பொருள் கிடைப்பதில்லை. திருநெல்வேலி அல்வா கொடுக்கிறார்கள்.

மகனை துணை முதலமைச்சர் ஆக்கியதுதான் தி.மு.க. அரசின் சாதனை.
மகளிர் உரிமைத் தொகையை தி.மு.க. தரவில்லை.

நாங்கள் வாதாடிஇ போராடி பெற்றுத் தந்தோம்.

ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் மகளிர் உரிமைத் தொகை தரப்பட்டது.
வர்தா புயல் மாதிரி ஒரு புயல் வந்தா போதும்… புயலோடு புயலா போயிடும். தி.மு.க. ஆட்சிக்கு இன்னும் 13 அமாவாசைதான் இருக்கிறது.

மின்சார கட்டணம்இ வீட்டு வரிஇ தொழிற்சாலை வரிஇ தொழில் வரி உயர்ந்துள்ளது.
மக்கள் மீது வரி மேல் வரி போடும் ஆட்சிதான் ஸ்டாலின் அரசு.

இந்தியாவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. அந்த சாதனையைதான் ஸ்டாலின் படைத்துள்ளார் என தெரிவித்தார்.

You may also like

இந்தியா செய்திகள்

144 பயணிகளுடன் 2.35 மணி நேரமாக வானில் வட்டமடித்த விமானம்… பத்திரமாக தரையிறக்கம்

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்
இந்தியா செய்திகள்

குடிமக்கள் கொண்டாட்டம் டாஸ்மாக் கடை திறப்பதற்கு முன்பே விற்பனை ஆரம்பம்

டாஸ்மாக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்படுவதே வழக்கமாக இருந்து வருகின்றது
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp