மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசன் சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சுமார் ஐந்து பேர் சாவடைந்தனர்.
இந்த விபத்தில் மேலும் ஐந்து பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
போர்ட்டோ ரிகோவின் சான் ஜுவானில் இருந்து பயணித்த இந்த விமானம், மதியம் 2 மணியளவில் ஓடுபாதையைத் விட்டு விலகி விமான நிலையத்தின் பிற வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் வீதியைக் கடந்து சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது அங்கிருந்த வாகனங்களிலும் விமானம் மோதுண்டுள்ள நிலையில் தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது விமானம் மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்த தகவல்கள் இன்னும் வௌியாகவில்லை.
சுமார் 200க்கும் மேற்பட்ட அவசரக்கால பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியை முன்னெடுப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
What’s your Reaction?

