நிலவும் மழைக்கால வானிலை காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கண்டி, கேகாலை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (05) காலை 9.00 மணி வரை இந்தச் சிவப்பு எச்சரிக்கை அமுலில் இருக்கும என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன:
கண்டி மாவட்டம்
கங்க இஹள கோரளை
உடுதும்பர
பஸ்பாகே கோரளை
கேகாலை மாவட்டம்
யட்டியாந்தோட்டை
நுவரெலியா மாவட்டம்
அம்பகமுவ
நோர்வூட்
இதனிடையே, கட்டம் 2 மற்றும் கட்டம் 1 இன் கீழும் பல மாவட்டங்களுக்கு அமுலாகும் வகையில் மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
எச்சரிக்கை மட்டம் 2 :
கண்டி மாவட்டம்
பன்வில, மெததும்பர, உடபலாத, தொலுவ மற்றும் தெல்தோட்டை
கேகாலை மாவட்டம்
அரநாயக்க, தெரணியாகலை, தெஹிஓவிட்ட மற்றும் புலத்கோஹுபிட்டிய
நுவரெலியா மாவட்டம்
தலவாக்கலை, நுவரெலியா, கொத்மலை கிழக்கு மற்றும் கொத்மலை மேற்கு
இரத்தினபுரி மாவட்டம்
இரத்தினபுரி, ஓப்பநாயக்க மற்றும் இம்புல்பே
எச்சரிக்கை மட்டம் 1:
கேகாலை மாவட்டம்
கேகாலை
நுவரெலியா மாவட்டம்
ஹங்குரன்கெத்த
இரத்தினபுரி மாவட்டம்
நிவிதிகல மற்றும் குருவிட்டை
What’s your Reaction?

