நீதித்துறையின் சுயாதீனத்தை அரசியல் மயப்படுத்தும் முயற்சியை அரசாங்கம் கைவிட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுடன் நேற்று(20) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீட்டிக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு ஒட்டுமொத்த சட்டத்தரணிகள் சமூகமும் எதிர்ப்பு தெரிவிக்கின்ற நிலையில் யாரை திருப்திப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த தீர்மானத்தில் உறுதியாக உள்ளது என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.
What’s your Reaction?

