கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் சேதவத்த பகுதியில் உள்ள களனி பாலம் அருகே அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக வந்த தகவலை அடுத்து, கிராண்ட்பாஸ் பொலிஸார் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர்.
இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், அவர் 35 முதல் 40 வயதுடைய ஆண் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இறந்தவர் சுமார் 5 அடி 5 அங்குல உயரம் கொண்டவர் என்றும், சுமார் 1 அங்குல நீளத்திற்கு முடியை வளர்த்துள்ளார் என்றும், மேலாடை அணியாமல் நீல நிறக் கால்சட்டை அணிந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சடலம் தற்போது வைக்கப்பட்டுள்ளதுடன், கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

