உள்ளூர் புதியவை முக்கிய செய்திகள்

ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை..!

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் முழுமையாகக் கைவிடப்பட்டது.

சபினா பார்க் கிரிக்கெட் மைதானத்தில் பெய்த பலத்த மழையே இதற்குக் காரணமாகும்.

இதன்படி, தொடரின் முதலாவது போட்டியில் பெற்ற 41 ஓட்டங்கள் வித்தியாசத்திலான வெற்றியின் மூலம் 1-0 என ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

நடுவர்கள் பலமுறை மைதானத்தைப் பரிசோதித்த போதிலும், மைதானப் பராமரிப்பாளர்களுடன் கலந்தாலோசித்த பின்னர், தலா 20 ஓவர்கள் கொண்ட போட்டியை ஆரம்பிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த இறுதி நேரமான இரவு 8.02 மணி வரையிலும் போட்டியை ஆரம்பிக்க முடியாது என அவர்கள் தீர்மானித்தனர்.

இருப்பினும், இந்த வெற்றியானது 23 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2003 ஆம் ஆண்டுக்கு பின் கரீபியன் தீவுகளில் இலங்கை அணி பெற்ற முதல் ஒருநாள் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp