உலகம்

பிரேசில் முன்னாள் ஜனாதிபதி போல்சனாரோவுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை பிரேசிலின் உயர் நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ குற்றவாளி என்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பின்னர், உயர் நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட குழுவினர் இந்த தண்டனையை நேற்று (11) அறிவித்துள்ளனர்.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தற்போதைய ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வாவிடம் தோல்வியடைந்த பின்னர், போல்சனாரோ பதவியில் இருந்து விலக மறுத்து, இராணுவப் புரட்சிக்கு சதித்திட்டம் தீட்டியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட குழுவில், 4 நீதிபதிகள் போல்சனாரோ குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நிலையில், 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்>நீதிபதிகள் உட்பட 106 நீதிதுறையினருக்கு இடமாற்றம்.

https://www.youtube.com/@pathivunews/videos

You may also like

உலகம் செய்திகள்

ஹிஸ்புல்லாவின் புதிய தலைவரையும் போட்டாச்சி என இஸ்ரேல் அறிவிப்பு

பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp