உள்ளூர் செய்திகள்

இலங்கை மாகாணசபை முறைமையை முற்றாக நடைமுறைப்படுத்தவேண்டுமென ஐநாவில் தெரிவிப்பு

இந்தியா, ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் 60வது அமர்வின் தொடக்க நாளான திங்கட்கிழமை (08-09) தனது நீண்டகால கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி, இலங்கையில் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துமாறு கோரியுள்ளது.

இந்த 13ஆம் திருத்தம், இந்தியா-இலங்கை உடன்படிக்கையின் அடிப்படையில், 1987 ஆம் ஆண்டு நியூடெல்லியின் கீழ் இலங்கையில் செயல்படுத்தப்பட்டது.
இலங்கை, இதுவரை 13ஆம் திருத்தத்தில் உள்ள காணி மற்றும் பொலீஸ் அதிகாரங்களை முழுமையாக அமல்படுத்தவில்லையென குறிப்பிடப்பட்டது.

ஜெனீவாவில் இந்தியா நிரந்தர வதிவிட பிரதிநிதி அனுபமா சிங் வழங்கிய உரையின் முக்கியப்பகுதி வருமாறு:
‘இலங்கையின் நெருக்கமான நட்பு நாடாகவும் அண்டைநாடாகவும் இருந்து வரும் இந்தியா, 2009 ஆண்டின் பின்; இலங்கையில் துயரம், மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம் மற்றும் கட்டுமான செயல்களுக்கு தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றது.

இந்தியா மற்றும் இலங்கை இரு நாடுகளும் ஆழமான வரலாற்று, கலாசார மற்றும் நாகரிக தொடர்புகளை பகிர்கின்றன.
இன்றைய திகதிக்கு இந்த உறவுகள் பல துறைகளில் வலுவான கூட்டாண்மையாக மாறியுள்ளன.

2022 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் பின்னர், இந்தியா பொருளாதார மீட்பு மற்றும் நீண்டகால நிலைத்தன்மைக்காக முக்கிய நிதி மற்றும் தொழில்நுட்ப ஆதரவினை வழங்கியது.
பிரதமர் நரேந்திர மோடியின் 2025 ஏப்ரல் இலங்கை பயணம் மற்றும் இலங்கை ஜனாதிபதி; அனுரகுமார டிஸனாயக்காவின் 2024 டிசம்பர் இந்தியர் பயணம் இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளில் முக்கியமான மைல்கல்லாகும்.

இந்தியாவின் நோக்கம் எப்போதும் தமிழர் சமூகத்தின் சமத்துவம், நீதி, கண்ணியமும், அமைதியும் இலங்கையின் ஒருமைபாடு, இறையான்யை காக்கும் வகையில் ஆதரிப்பதாகும்.
இதற்காக இந்தியா, இலங்கை அரசியலமைப்பை முழுமையாக செயல்படுத்தும், விரைவான மாகாண சபை தேர்தல்களை நடாத்தும், அதிகார பங்;கீட்டை பொருத்தமான முறையில் வழங்கும் என்பதில் தொடர்ச்சியான கோரிக்கையை முன்வைத்துள்ளது.

இந்தியா நம்புகிறது, பொருத்தமான அதிகார பகிர்வு மற்றும் உண்மையான சரிசெய்தல், அனைத்து சமூகங்களையும் உள்ளடக்கிய முறையில் நடைபெறுவதால், நாட்டின் கட்டுமானத்தையும் நிலையான அமைதியையும் வலுப்படுத்தும்.
இந்த முன்னேற்றம், இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் பயனளிப்பதோடு, இரு நாடுகளுக்கிடையேயான வலுவான நட்பு மற்றும் நம்பிக்கையின் அடித்தளத்தையும் உறுதிப்படுத்தும்.’ என தெரிவித்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp