உள்ளூர் செய்திகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை OMP மூலம் வழங்க அரசாங்கம் முயற்சி

இலங்கையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் நோக்கில், காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) பெற்றுள்ள 10,517 முறைப்பாடுகளின் விசாரணைகளை 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவு செய்ய விசேட திட்டம் நடைமுறைப்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

அமைச்சரவையின் அங்கீகாரத்தின்படி, 75 தகுதியான நபர்களைக் கொண்ட 25 துணைக்குழுக்கள் நியமிக்கப்பட உள்ளன.
இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மூத்த நிர்வாக அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இடம்பெறுவர்.
இவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் பணியில் ஈடுபடவுள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் அலுவலகம் (OMP) காணாமல் போனவர்களையும், மாயமானவர்களையும் பற்றிய விசாரணைகள் மற்றும் அவற்றின் அறிக்கைகள் வெளியிடும் பொறுப்பை வகித்து வருகிறது.
இதுவரை மொத்தம் 16,966 முறைப்பாடுகள்; அலுவலகத்துக்கு கிடைத்துள்ளன.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp