உள்ளூர் செய்திகள்

மக்களின் காணிகள் மக்களுக்கே என்கிறார் அமைச்சர் சந்திரசேகர்

வடக்கு மக்களுக்குரிய காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என்ற உறுதிப்பாட்டில் ஜனாதிபதி இருப்பதாகவும், தையிட்டி விகாரைப் பிரச்சினைக்கும் சுமூகமான தீர்வு காணப்படும் எனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாண தேசிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர்,

‘ரணில் விக்கிரமசிங்கவை யாரும் தொட முடியாது, அவர் சர்வதேசத்தில் வல்லவர், அவரோடு விளையாட முடியாது என எதிரணியினர் தொடர்ந்து கூறிவந்தனர்.
ஆனால் இன்று அவர்மீது சட்டம் பாய்ந்துள்ளதால் ராஜபக்சக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாட்டுக்கு தீங்கு விளைவித்தது ரணிலா, ராஜபக்சவா என்பது எங்களுக்கு முக்கியமில்லை.
எவராக இருந்தாலும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டம் உரிய நடவடிக்கை எடுக்கும்.

அடுத்த சில வாரங்களில் வடக்கு அரசியல்வாதிகளின் வாழ்விலும் மாற்றம் வரும்.
மக்களுக்கு சொந்தமான அனைத்து காணிகளும் விடுவிக்கப்படும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடு.
தையிட்டி விகாரைப் பிரச்சினையும் சுமூகமாகத் தீர்க்கப்படும்.
வடக்குக்கு வரும் சுற்றுலா மற்றும் முதலீடுகள் தொடர்பில் சில அதிகாரிகள் தாமதம், இழுத்தடிப்பு செய்கின்றனர்.
அவர்களையும் அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp