உள்ளூர் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பால் 3 இலட்சம் பேர் வேலையிழக்கும் நிலையேற்பட்டுள்ளது

அமெரிக்கா, 2025 ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு 30 வீத வரியை விதிக்க முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கை, இலங்கையின் 1.9 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புடைய ஆடை ஏற்றுமதித் துறையை ஆழமாகக் குலைக்கக்கூடியது என வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தத் துறையில் சுமார் 300,000 பேர் நேரடியாக வேலை செய்து வருகின்றனர்.
மேலும், தனியார் தையல் தொழிலாளர்கள், சில்லறை தொழிலாளர்கள், மற்றும் பகுதி நேர உழைப்பாளர்கள் என ஏராளமான குடும்பங்கள் இதன் தாக்கத்தை எதிர்கொள்கின்றன.

இலங்கை ஆடைத்தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் (துயுயுகு) தலைவர் யோஹன் லாரன்ஸ், ‘இது எதிர்பாராத ஓர் அச்சுறுத்தல்.
நாங்கள் அமெரிக்க அதிகாரிகளிடம் உரையாடல் நடத்தி, இந்த வரி சுமையை குறைக்குமாறு முயற்சி செய்கிறோம்’ எனக் கூறினார்.

அதிக வரி காரணமாக, வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா போன்ற நாடுகளுடன் போட்டியிடும் இலங்கையின் திறனும், அதனால் பின் தங்க வாய்ப்பும் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இத்தகைய வரி மேலதிகமாகத் தொடர்ந்தால், முன்னிலை ஆடைத்தொழிற்சாலைகள் பணியாளர்களை குறைக்கும் நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள நேரிடும் என்பதும் கவலைக்கிடமான ஒன்று.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp