2026 ஆம் ஆண்டில் ஆறாம் வகுப்புக்கு செல்லவுள்ள மாணவர்களின் பெற்றோர், தங்களின் பிள்ளைகளுக்கான கல்வி சீர்திருத்தங்களை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் கோரி, இன்று பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்மொழியப்பட்டுள்ள ஆறாம் வகுப்பு கல்வி சீர்திருத்த கல்வி முறையை தாமதமின்றி அமல்படுத்த வேண்டும் என்றும், இந்த ஆண்டிலேயே கல்வி மாற்றங்கள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் மேலும் தாமதங்களால் பாதிக்கப்படக் கூடாது என தெரிவித்த பெற்றோர், அரசாங்கம் இதுகுறித்து உடனடி தீர்மானம் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்

