உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

40 பாடசாலைகளில் சேகரித்த தகவலின்படி, 9.1 வீதமான மாணவர்கள் உயிரை மாய்த்துச் கொண்டுள்ளதாக ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

உயிரை மாய்த்துக் கொண்ட மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு சமூகம் பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர், கல்வி அமைச்சும் சம்பந்தப்பட்ட பாடசாலையும் இந்த சம்பவத்தில் நீதியான முறையில் செயல்பட்டிருந்தால், இவ்வாறான சம்பவம் நிகழாது எனக் கூறினார்.

ஜோசப் ஸ்டாலின், ‘அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்’ என்று அறிவித்துள்ளார். மேலும், ‘அந்த மாணவியின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறு இத்தகைய சம்பவம் ஏற்பட்டது என்பதை விளக்கும் வகையில், தகுந்த முறையில் விசாரணை செய்யப்பட வேண்டும்’ என்றார்.

கொழும்பிலுள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்ட அம்ஷிகா, பாடசாலையில் ஏற்பட்ட பாலியல் துஷ்பிரயோகத்தால் மன விரக்தி அடைந்த நிலையில், கடந்த ஏப்ரல் 29 ஆம் திகதி உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சம்பவம் தொடர்பாக, 4 ஆம் தேதி இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஊடக சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
இதில், உயிரை மாய்த்த மாணவியின் பெற்றோர், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், மற்றும் அங்கத்தினர்கள் கலந்து கொண்டனர்.

ஜோசப் ஸ்டாலின் மேலும் கூறினார், ‘இந்த சம்பவம் மட்டுமின்றி, அதே நேரத்தில் சப்ரகமுக பல்கலைக்கழக மாணவன் தவறான முடிவுகளை எடுத்து உயிரை மாய்த்துக் கொண்டார்.
இது போன்ற சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன என்பதை நாம் உள்நோக்கி பார்க்க வேண்டும்.’

இதனிடையே, சுகாதார அமைச்சு 40 பாடசாலைகளில் 3843 மாணவர்களிடமிருந்து சேகரித்த தகவலின்படி, 9.1மூ மாணவர்கள் உயிரை மாய்த்துச் கொண்டுள்ளனர்;
. 4.4 வீத மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்துள்ளனர்.

‘இந்த சம்பவங்களுக்கு சமரசமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இது போன்ற சம்பவங்கள் மேலும் ஏற்படாததற்கு, அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவத்தில், மாணவி பாடசாலைக்கு அறிவித்து, பொலிஸில் முறைப்பாடு செய்து, ஆசிரியர் கைது செய்யப்பட்டார்,’ என்று அவர் குறிப்பிட்டார்.

மாணவி டில்ஷி அம்ஷிகாவின் மரணம் ஒரு பரிதாபமாகும். பெற்றோர் மற்றும் சமூகத்தின் தவறுகள் மட்டுமன்றி, கல்வி துறையும் இந்த சம்பவத்தில் மூலமாக செயல்படுத்தப்படவில்லை. ‘கல்வி அமைச்சு, இவ்வாறான சம்பவங்களில் பெற்றோர் மற்றும் மாணவர்களுக்கு நீதியை வழங்க வேண்டும்,’ என்று ஸ்டாலின் கூறினார்.

இந்த சம்பவம், சமூகத்தின் பொறுப்பையும் காட்டுகிறது. மாணவியின் வாழ்க்கை இழப்புக்கு சமூகமும், கல்வி துறையும் பொறுப்பாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

‘நாட்டில் 43 இலட்சம் மாணவர்கள் உள்ளனர். எல்லோரும் எமக்கு முக்கியம். எந்த மாணவிக்கும் அநீதி இடம் பெறக்கூடாது,’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

‘அம்ஷிகாவின் மரணத்தில் நீதியான விசாரணை வேண்டும்’ என்று ஜோசப் ஸ்டாலின் முறைப்பாடு செய்துள்ளார்.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp