உள்ளூர்

2 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை ஏற்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

இலங்கை மத்திய வங்கி தனது 75ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் மதிப்புள்ள ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது.

புதிய நாணயத்தாளை தடை இன்றிக் கையாளவும் பரிமாற்றத்துக்கு வசதியாக்கவும், உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகள் தற்போது தங்களது பணம் கையாளும் இயந்திரங்களில் தேவையான அளவமைக்கும் செயன்முறைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த செயன்முறையின் முன்னேற்றத்தின்படி, புதிய நாணயத்தாள்கள் படிப்படியாக உரிமம் பெற்ற வங்கிகள் வழியாக பொதுமக்களின் புழக்கத்திற்கு அறிமுகப்படுத்தப்படும்.

நாணயத்தாள் பரிமாற்றப்படுகின்ற இக்காலத்தில் பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு மத்திய வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அனைத்து வங்கிகளிலும் அளவமைக்கும் செயற்பாடுகள் நிறைவடைந்தவுடன், புதிய 2000 ரூபாய் நாணயத்தாளை எந்தத் தடையும் இன்றிக் பயன்படுத்த முடியும் என மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

இதையும் படியுங்கள்>தியாகி திலீபன் கிழக்கிலிருந்து வடக்கிற்கு வருகிறார்

You may also like

உள்ளூர்

ராஜபக்ஷக்களுக்கு எதிரான ஊழல்களின் விசாரணைகள் ஆரம்பிக்கப்ட்டுள்ளது

கடந்த காலத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்திய ராஜபக்ஷக்களுக்கு எதிரான அனைத்து ஊழல்
உள்ளூர்

முல்லைத்தீவில் வர்த்தக நிலையமொன்று தீக்கிரையானது

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் கடை ஒன்று எரிந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp