உள்ளூர் செய்திகள் முக்கிய செய்திகள்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் அருகே விசமிகள் தீவைத்ததால் பெரும் சிக்கல்

வேலணை – மண்கும்பான் பிள்ளையார் கோயில் சுற்றுப்புறத்தில் உள்ள வயல்வெளிகளில் புதர்களுக்கு விசமிகள் தீவைத்ததால், அப்பகுதியைச் சுற்றி சென்ற மக்களுக்கு வீதியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதுகுறித்து பிரதேச சபைத் தவிசாளருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, உடனடி நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டது.

தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி, கடும் காற்றால் பரவிய பெரும் சுடருடன் எரிந்த தீயை கட்டுப்படுத்தினர்.

அல்லைப்பிட்டி அலுமினியம் தொழிற்சாலை பகுதியிலிருந்து அராலிச் சந்தி வரையிலான வயல்வெளிகளில் ஆண்டுதோறும் விசமிகள் தீவைத்துவருவது வழக்கமாக மாறியுள்ளது.
இதனால் தீ அணைக்கும் பணிகளும் தொடர்கதையாகி வருகின்றன.
ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் விசமிகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

குறிப்பாக, இப்பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. பருவ காலங்களில் பல வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கள் இனப்பெருக்கங்களைச் செய்வது வழமையான ஒன்றாகும். ஆனால் இவ்வாறான தீவைப்புகள் அந்தப் பறவைகள் சரணாலயத்தையே ஆபத்துக்குள் தள்ளியுள்ளது.

மேலும், தீவைப்புகளால் புற்கள் எரிந்து அழிவதால் அவற்றை உணவாகக் கொண்டிருந்த கால்நடைகள் பசி காரணமாக வீடுகளுக்குள் நுழையும் நிலையும் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like

செய்திகள் வணிகம்

IMF உயர்மட்டக் குழு, ஜனாதிபதி அநுரவை சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்டக்
செய்திகள்

தமிழரசுக்கட்சியை கைப்பற்றினார் எம்.ஏ.சுமந்திரன் – மாவை சேனாதிராஜா – சட்டத்தரணி தவராசா திருமதி ரவிராஜ் விலகல்

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும்
Dany Williams

Dany Williams

Typically replies within an hour

I will be back soon

Dany Williams
Hey there 👋
It’s your friend Dany Williams. How can I help you?
WhatsApp