வவுனியாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்ட நெளுக்குளம் பொலிஸார், பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தலைமையில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின், ஞாயிற்றுக்கிழமை (04) கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
கைதானவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியாவில் கொள்ளையிடப்பட்ட 80 இலட்சம் பெறுமதியான தங்க நகைகளை 2 நாடகளில் மீட்ட பொலிஸார்
வவுனியாவில் நடைபெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக 80 இலட்சம் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு, வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து குறித்த நகைகள் கொள்ளையிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்ட நெளுக்குளம் பொலிஸார், பொலிஸ் பொறுப்பதிகாரி டி.எம்.ஏ. சமரகோன் தலைமையில் விசேட நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் பின், ஞாயிற்றுக்கிழமை (04) கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர்.
கைதானவரிடமிருந்து 35 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றன. இன்று சந்தேக நபர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
